என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக வில்வித்தை போட்டி"

    • ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதியில் தோற்றது.
    • ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.

    தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது.

    தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய அணி அரை இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துக்கு விளையாடியது. அதில் 5-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.

    ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.

    • 4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.
    • கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    உலக சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், மூன்று செட்களின் முடிவில் 179-179 என சமநிலையில் இருந்தது.

    4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.

    இதன்மூலம், ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    துருக்கி சாம்சன் நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். #DeepikaKumari
    சாம்சன்:

    உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் சாம்சன் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியின் லிசா உன்ருவை எதிர்கொண்டார். இதில் இருவரும் தலா 5 புள்ளி எடுத்து சமநிலையில் இருந்த நிலையில் ஷூட்-அவுட் சுற்றிலும் சமநிலை (9-9) நீடித்தது. இருப்பினும் இலக்கை நோக்கி அம்புகளை துல்லியமாக செலுத்திய வகையில் தீபிகா குமாரி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

    ஜார்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி உலக போட்டியில் ருசித்த 5-வது பதக்கம் இதுவாகும். தீபிகா குமாரியை தவிர்த்து, இந்திய வீரர் அபிஷேக் வர்மாவும் இந்த போட்டியில் வெண்கலம் வென்றார். #DeepikaKumari

    ×