என் மலர்
தேர்தல் செய்திகள்
சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #MinisterKTRajendraBalaji
விருதுநகர்:
விருதுநகர் நகர்ப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும்.

சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.
நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.
தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். தேர்தல் கமிஷனுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு.
தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார்.
இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார். ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். முதல்வர் துணை முதல்வர் பிரசாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKTRajendraBalaji
விருதுநகர் நகர்ப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும்.
சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்த வில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார்.

சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.
நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.
தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். தேர்தல் கமிஷனுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு.
தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார்.
இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார். ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். முதல்வர் துணை முதல்வர் பிரசாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKTRajendraBalaji
பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
புதுச்சேரி:

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்ற படியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். #Loksabhaelections2019
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.
கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் நின்ற படியும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்த சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர் கடந்த 14-ந் தேதி கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்திலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்ற படியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கடை வீதியில் ஓட்டு சேகரித்தார். அவர் அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார்.
பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ்டாப்பில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்யும் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.
கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் நின்ற படியும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்த சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர் கடந்த 14-ந் தேதி கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்திலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்ற படியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கடை வீதியில் ஓட்டு சேகரித்தார். அவர் அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார்.
பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ்டாப்பில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்யும் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் சொத்து மதிப்பு குறைவாக உள்ள ஏழை வேட்பாளகள் பற்றிய விவரங்களை பார்ப்போம். #LokSabhaElections2019 #Poorcandidates
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த 31 ஏழை வேட்பாளர்கள் குறித்து தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக ஏழை வேட்பாளர்களின் பெயர்கள், போட்டியிடும் தொகுதி மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு வருமாறு:
நாம் தமிழர் கட்சி:

வெற்றிச்செல்வி திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம், சனுஜா பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம், சித்ரா கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.
தீபலட்சுமி வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம், புவனேஷ்வரி ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம், பிரகலதா விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம், ருக்மணி தேவி தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம், தமிழரசி ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம், ஏ.ஜெ.ஷெரின் தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம், பாவேந்தன் அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20 லட்சம்.
மக்கள் நீதி மய்யம்:
அன்பின் பொய்யாமொழி விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம், முனீஸ்வரன் தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம், ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் கிருஷ்ணகிரி தொகுதி– ரூ. 20.1 லட்சம், அருள் திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம், விஜயபாஸ்கர் ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம், பிரபு மணிகண்டன் சேலம் தொகுதி–ரூ. 27.5 லட்சம், ரவி சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்.
அமமுக:
செங்கொடி நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
சு.வெங்கடேசன் மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.
பாமக:
வடிவேல் ராவணன் விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.
எஸ்டிபிஐ:
தெகலான் பாகவி மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த 31 ஏழை வேட்பாளர்கள் குறித்து தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக ஏழை வேட்பாளர்களின் பெயர்கள், போட்டியிடும் தொகுதி மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு வருமாறு:
நாம் தமிழர் கட்சி:
சிவரஞ்சனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ரூ. 15,000, மதிவாணன் தென்காசி தொகுதி - ரூ 21,000, மாலதி நாகப்பட்டினம் தொகுதி – ரூ.1.19 லட்சம், பாண்டியம்மாள் மதுரை தொகுதி – ரூ.1.5 லட்சம், சாந்தி பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம், சுபாஷினி மயிலாடுதுறை தொகுதி - ரூ 5.25 லட்சம், கல்யாணசுந்தரம் கோவை தொகுதி – ரூ.8.55 லட்சம், மணிமேகலை நீலகிரி தொகுதி – ரூ.9. 02 லட்சம், எம். சிவஜோதி சிதம்பரம் தொகுதி - ரூ 10.37 லட்சம், காளியம்மாள் வட சென்னை தொகுதி – ரூ.9.17 லட்சம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள்
வெற்றிச்செல்வி திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம், சனுஜா பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம், சித்ரா கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.
தீபலட்சுமி வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம், புவனேஷ்வரி ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம், பிரகலதா விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம், ருக்மணி தேவி தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம், தமிழரசி ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம், ஏ.ஜெ.ஷெரின் தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம், பாவேந்தன் அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20 லட்சம்.
மக்கள் நீதி மய்யம்:
அன்பின் பொய்யாமொழி விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம், முனீஸ்வரன் தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம், ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் கிருஷ்ணகிரி தொகுதி– ரூ. 20.1 லட்சம், அருள் திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம், விஜயபாஸ்கர் ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம், பிரபு மணிகண்டன் சேலம் தொகுதி–ரூ. 27.5 லட்சம், ரவி சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்.
அமமுக:
செங்கொடி நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
சு.வெங்கடேசன் மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.
பாமக:
வடிவேல் ராவணன் விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.
எஸ்டிபிஐ:
தெகலான் பாகவி மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #Assemblybypoll
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியின் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பிரசாரம் செய்யலாமா? என்று அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனில் கேட்டிருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 4 தொகுதி மக்களும் ஓட்டுப்போட உள்ளதால் இந்த 4 தொகுதிகளிலும் இப்போது பிரசாரம் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.
எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Assemblybypoll
பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியின் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பிரசாரம் செய்யலாமா? என்று அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனில் கேட்டிருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 4 தொகுதி மக்களும் ஓட்டுப்போட உள்ளதால் இந்த 4 தொகுதிகளிலும் இப்போது பிரசாரம் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.
எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Assemblybypoll
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaelections2019 #DMK #MKStalin
கும்பகோணம்:
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவர் நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதையடுத்து அவர் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் தேர்தலில் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று மு.க.ஸ்டாலின் திருவாரூரிலேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இன்று காலை மு.க.ஸ்டாலின் கும்பகோணத்தில் இருந்து பிரசாரத்திற்கு புறப்பட்டார். முதலில் வலங்கைமான் பகுதியில் திறந்த வேனில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அவர் பேசியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன் . ஆனால் முதல்வர் ஒரு வார காலத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் வந்து விட்டு சென்றார். பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்பதோடு, ஆறுதல் வார்த்தை கூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். அண்ணா, காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர். 5 முறை முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். அவருடைய ஆசை மெரினாவில் அண்ணா சமாதியின் அருகிலே அவரது உடலை வைக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்காக நான் நேரடியாக முதல்அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தை விட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால் ஆறடி நிலம் கூட கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தை அணுகி கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றி வைத்தோம்.
நமது தலைவருக்கு, ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் ஓட்டு கேட்கிறேன். நான் வெற்றி பெற்று கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிக்கனியை மாலையாக வைக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது, தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே கதிர் அரிவாள் சின்னத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் மு,க.ஸ்டாலின் குடவாசல், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, நாகை, நீர்முளை, கீழ்வேளூர் வழியாக திருவாரூர் சென்றார்.
திருவாரூர் நகரில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனுடன் வீதி வீதியாக ஆதரவு திரட்டி மாலை 6 மணியுடன் அங்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், திருவாரூரிலேயே பிரசாரத்தை இன்று நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaelections2019 #DMK #MKStalin
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவர் நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதையடுத்து அவர் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் தேர்தலில் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று மு.க.ஸ்டாலின் திருவாரூரிலேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இன்று காலை மு.க.ஸ்டாலின் கும்பகோணத்தில் இருந்து பிரசாரத்திற்கு புறப்பட்டார். முதலில் வலங்கைமான் பகுதியில் திறந்த வேனில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அவர் பேசியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன் . ஆனால் முதல்வர் ஒரு வார காலத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் வந்து விட்டு சென்றார். பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்பதோடு, ஆறுதல் வார்த்தை கூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.
இந்த நிலையில் பிரச்சாரத்தை நாகப்பட்டினம் தொகுதியில் தொடங்கி மண்ணின் மைந்தர் என்ற முறையில் பிரச்சாரத்தை இந்த தொகுதியில் முடிக்க வந்துள்ளேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்படும், விவசாயக் கூலி ஆண், பெண் பாகுபாடின்றி சமமாக வழங்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய், ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். அண்ணா, காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர். 5 முறை முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். அவருடைய ஆசை மெரினாவில் அண்ணா சமாதியின் அருகிலே அவரது உடலை வைக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்காக நான் நேரடியாக முதல்அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தை விட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால் ஆறடி நிலம் கூட கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தை அணுகி கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றி வைத்தோம்.
நமது தலைவருக்கு, ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் ஓட்டு கேட்கிறேன். நான் வெற்றி பெற்று கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிக்கனியை மாலையாக வைக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது, தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே கதிர் அரிவாள் சின்னத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் மு,க.ஸ்டாலின் குடவாசல், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, நாகை, நீர்முளை, கீழ்வேளூர் வழியாக திருவாரூர் சென்றார்.
திருவாரூர் நகரில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனுடன் வீதி வீதியாக ஆதரவு திரட்டி மாலை 6 மணியுடன் அங்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், திருவாரூரிலேயே பிரசாரத்தை இன்று நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaelections2019 #DMK #MKStalin
டிவியை உடைக்கும் வீடியோ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக வந்த புகாரை அடுத்து புதிய வீடியோ வெளியிட்டு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #Kamalhassan
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜனதா தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும் அதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும் அந்த வீடியோ அமைந்து இருந்தது.
இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்த விளம்பரத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் சென்றது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் விளம்பரத்தில் மாற்றங்களை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு பதில் பீப் ஒலி ஒலிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டு கமல் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரசாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.
நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்’.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாசிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:-
‘எங்கள் தலைவர் எப்போதும் நாகரிகம் கடைப்பிடிப்பவர். தனிமனிதத் தாக்குதல் செய்ய விரும்பமாட்டார்.
அதனால்தான் எந்தக் கட்சியின் பெயரையோ தலைவர்களின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக விமர்சித்தார். அது சேர்ந்தவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கும். மற்றபடி அவருக்கு தயக்கமோ பயமோ கிடையாது.
அவர் ரிமோட்டை எறிந்து டிவியை உடைப்பது இன்றைய மக்களின் மன நிலை. அரசியல் வாதிகளின் போலியான தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து ‘அந்த டிவியை தூக்கிப் போட்டு உடைக்கணும்‘ என சொல்லும் அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் எங்கள் தலைவர் அவ்வாறு செய்தார்.
அந்தக் காணொலி மீது இன்று விமர்சனம் வருகிறது என்றால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுதானே. வெகுஜன மக்கள் எங்களைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதுபோதும்’.
இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜனதா தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும் அதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும் அந்த வீடியோ அமைந்து இருந்தது.
இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்த விளம்பரத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் சென்றது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் விளம்பரத்தில் மாற்றங்களை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு பதில் பீப் ஒலி ஒலிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டு கமல் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரசாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.
நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்’.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் எங்கெல்லாம் பீப் ஒலி கேட்கிறது என்பது ஏற்கனவே விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக புரியும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் பெயரை கமல்ஹாசன் தனது விளம்பரத்தில் குறிப்பிடாமல் இருந்தார். எனவே அது பீப் ஒலியிலிருந்து தப்பிவிட்டது.

இந்த வீடியோ குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாசிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:-
‘எங்கள் தலைவர் எப்போதும் நாகரிகம் கடைப்பிடிப்பவர். தனிமனிதத் தாக்குதல் செய்ய விரும்பமாட்டார்.
அதனால்தான் எந்தக் கட்சியின் பெயரையோ தலைவர்களின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக விமர்சித்தார். அது சேர்ந்தவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கும். மற்றபடி அவருக்கு தயக்கமோ பயமோ கிடையாது.
அவர் ரிமோட்டை எறிந்து டிவியை உடைப்பது இன்றைய மக்களின் மன நிலை. அரசியல் வாதிகளின் போலியான தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து ‘அந்த டிவியை தூக்கிப் போட்டு உடைக்கணும்‘ என சொல்லும் அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் எங்கள் தலைவர் அவ்வாறு செய்தார்.
அந்தக் காணொலி மீது இன்று விமர்சனம் வருகிறது என்றால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுதானே. வெகுஜன மக்கள் எங்களைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதுபோதும்’.
இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan
22 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்? என கேள்வி எழுப்பினார். #Loksabhaelections2019
ஈரோடு:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு பிரசாரம் செய்தார்.
1998 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி திருசெங்கோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வாக்கு கேட்ட இடத்தில் இப்போது தமிழக முதல்வராக வந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமராக வருவதற்கு தனித்தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமை மிகுந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா? அல்லது திமுக உறுப்பினரா? என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டு விட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன.
வைகோவுக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதையெல்லாம் நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்த கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்? இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திமுக தான். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை கலைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காக ராகுல் காந்தியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு மோசமான நிலையிலா இருக்கிறோம்? முதல்வராக வேண்டும் அவர் கனவு எப்போதும் நிறைவேறாது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நான் கிளைச்செயலராக இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இப்போது முதல்வராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தை நிழலில் இருந்து கட்சிக்கு தலைவராகி இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள்.
இவ்வாறு முதல் அமைச்சர் எட்பபாடி பழனிசாமி பேசினார்.
அதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உடன் இருந்தனர். #Loksabhaelections2019 #Edappadipalaniswami #MKStalin
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு பிரசாரம் செய்தார்.
1998 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி திருசெங்கோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வாக்கு கேட்ட இடத்தில் இப்போது தமிழக முதல்வராக வந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமராக வருவதற்கு தனித்தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமை மிகுந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா? அல்லது திமுக உறுப்பினரா? என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டு விட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன.
வைகோவுக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதையெல்லாம் நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்த கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்? இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திமுக தான். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை கலைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காக ராகுல் காந்தியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு மோசமான நிலையிலா இருக்கிறோம்? முதல்வராக வேண்டும் அவர் கனவு எப்போதும் நிறைவேறாது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நான் கிளைச்செயலராக இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இப்போது முதல்வராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தை நிழலில் இருந்து கட்சிக்கு தலைவராகி இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள்.
இவ்வாறு முதல் அமைச்சர் எட்பபாடி பழனிசாமி பேசினார்.
அதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உடன் இருந்தனர். #Loksabhaelections2019 #Edappadipalaniswami #MKStalin
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LokSabhaElections2019 #Vellore
புதுடெல்லி:
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
பிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #LokSabhaElections2019 #NirmalaSitharaman
சிவமொக்கா:
கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ராகவேந்திரா எம்.பி.யை ஆதரித்து மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சிவமொக்கா டவுனில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அப்பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது:-

கிராமபுறங்களில் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா அடையாத வளர்ச்சி, மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது.
மீண்டும் மோடி பிரதமர் ஆனால் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் இரட்டிப்பாகும். 2047-ம் ஆண்டில் நாடு முன்னேறிய நாடுகளில் முதல் இடத்தை பிடிக்கும். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதற்கு இந்தியா சார்பில் உடனடியாக தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை பிடுங்கி எறியும் ஆற்றல் படைத்தவர் மோடி. இந்த தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் ராகவேந்திராவை வெற்றி பெற செய்வதன் மூலம் மோடியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #NirmalaSitharaman
கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ராகவேந்திரா எம்.பி.யை ஆதரித்து மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சிவமொக்கா டவுனில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அப்பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது:-
மோடி நமது நாட்டிற்கு பிரதமராக கிடைத்து உள்ளார். நமது நாட்டின் பெருமை, வலிமை, பொருளாதார வளர்ச்சி எப்படி உயர்ந்து உள்ளதோ அதுபோல நாட்டின் பாதுகாப்பும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

கிராமபுறங்களில் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா அடையாத வளர்ச்சி, மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது.
மீண்டும் மோடி பிரதமர் ஆனால் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் இரட்டிப்பாகும். 2047-ம் ஆண்டில் நாடு முன்னேறிய நாடுகளில் முதல் இடத்தை பிடிக்கும். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதற்கு இந்தியா சார்பில் உடனடியாக தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை பிடுங்கி எறியும் ஆற்றல் படைத்தவர் மோடி. இந்த தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் ராகவேந்திராவை வெற்றி பெற செய்வதன் மூலம் மோடியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #NirmalaSitharaman
தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார். #LokSabhaElections2019 #MuralidharRao
சென்னை:
பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.
காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.
தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.
நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார். #LokSabhaElections2019 #MuralidharRao
பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.
காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.
நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார். #LokSabhaElections2019 #MuralidharRao
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabhaElections2019 #ManekaGandhi
புதுடெல்லி:
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.
ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019 #ManekaGandhi
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.
ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019 #ManekaGandhi






