search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kt rajendra balaji"

    சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #MinisterKTRajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் நகர்ப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும்.

    சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்த வில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார்.



    சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.

    மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.

    தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். தேர்தல் கமி‌ஷனுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு.

    தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார்.

    இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார். ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். முதல்வர் துணை முதல்வர் பிரசாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKTRajendraBalaji
    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினார். #MinisterRajendraBalaji #ADMK
    சாத்தூர்:

    சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி பெறும்.

    மோடி நாட்டின் சிறந்த தலைவராக செயல் ஆற்றி வருகிறார். இந்தியாவை வல்லரசாக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்.

    எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுகுதியும் கிடையாது. மேடைக்கு மேடை தி.மு.க.வை வசைபாடிய வைகோவை கூட்டணியில் வைத்துக்கொண்டு பா.ம.க நிறுவனர் ராமதாசை விமர்சிக்க ஸ்டாலினுக்கு அருகதையில்லை.

    சாத்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சாத்தூர் தொகுதி மக்கள் இட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

    கூட்டத்தில் 1270 பேருக்கு வேட்டி, சேலைகள், மகளிருக்கு தையல் எந்திரங்கள் மற்றும் 50 சலவை தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterRajendraBalaji #ADMK
    700 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். #MarriageAssistance #KTRajendraBalaji
    சாத்தூர்:

    சாத்தூரில் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கான தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அப்போது 700 பெண்களுக்கு ரூ.4 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களினால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுமார் ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்து, மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்து, நிவாரணப்பணிகளை மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.

    விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைதொடர்ந்து சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேகதாது பிரச்சினையில் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக தமிழகத்திற்கு தண்ணீரை கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் இருமாநில பிரச்சினைகள் தீராது என்றார். ஆணவ கொலைகளுக்கு திராவிட கட்சிகள் காரணமில்லை என்றும் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனிற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாகவும் இதனை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் வாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன், பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டதோடு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆலங்குளம் சிமெண்டு ஆலை விருந்தினர் விடுதிக்கு வந்த அவரிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    அப்போது கலெக்டர் சிவஞானம், தாசில்தார் ராஜ்குமார், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மாரியப்பன், திருப்பதி, புலிப்பாறைப்பட்டி மணிகண்டன், சங்கரமூர்த்திபட்டி முருகன், கரிசல்குளம் பரமானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
    அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணம்மாள் விசாரித்து வருவதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
    மதுரை:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

    அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீதான முதற்கட்ட விசாரணை முறையாக நடக்கவில்லை. அவர் கடந்த 1996-ம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம், சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை ஐகோர்ட்டில் நேற்று மாலை விசாரித்தனர்.

    அப்போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை அதிகாரி கண்ணம்மாள் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக ஏராளமான சாட்சிகளிடம் விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்றும் போலீசார் நீதிபதிகளிடம் கோரினர். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த அறிக்கையை வருகிற அக்டோபர் மாதம் தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
    ×