search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு- ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததாக தகவல்
    X

    வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு- ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததாக தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LokSabhaElections2019 #Vellore
    புதுடெல்லி:

    வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.



    மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
    Next Story
    ×