என் மலர்
தேர்தல் செய்திகள்
மதுரை:
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் இன்று வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
தேர்தலின்போது ஆளும் தரப்பு மீது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக புகார் எழுப்புவது, வழக்கமான ஒன்றுதான்.
சித்திரை திருவிழாவினால் வாக்குப்பதிவு குறையாது. மக்கள் திருவிழாவைக் கொண்டாடிவிட்டு வாக்குப்பதிவு செய்ய வந்து விடுவார்கள்.
சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது.
வாக்குப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை சிறிது நேரம் அதிகரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerudayakumar #admk #TNElections2019
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK #MKStalin

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் தவிர பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNElections2019 #DMKFilesComplaint
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வாக்களித்து வருகின்றனர். சாத்தூர் தொகுதி உள்பட அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள.
தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருமானவரித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் சொல்லுவது புதிதல்ல. அ. ம.மு.க., தி.மு.க. கட்சிகள் மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 43 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கொள்ளையடிக்கவே இருவரும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.
ஆட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் கவிழ்ப்பேன் என திரிகிறார். பிரசாரத்தில் ஸ்டாலின் குணாதிசியம் தெரிந்தது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. மீண்டும் மோடி பிரதமராக வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #TNElections2019
மதுரை:
மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்திரை திருவிழா காலத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலை பொறுத்தவரை மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு மக்களை சந்தித்தோம்.
தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த அரசுகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
எனவே மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

“1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரியகுளத்தில் 32.32 சதவீதம், பெரம்பலூரில் 39.85 சதவீதம், தருமபுரியில் 43.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும்” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #TNElections2019 #VoterTurnout
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்பு தாது உருக்கு தொழிற்சாலையை மீண்டும் மூடக்கோரி போராட்டம் நடத்தினர். வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடாததால் தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அந்த கிராமத்தில் 537 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வாக்கு சாவடி எண்.52-ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பூத் ஏஜெண்டுகளும் வரவில்லை.
இதையடுத்து டி.எஸ்.பி. கல்பனா மற்றும் போலீசார் நாகராஜ் கண்டிகை கிராமத்துக்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
மதுராந்தகத்தை அடுத்த கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற் சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அதை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடக்கோரி கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அந்த கிராமத்தில் 1800 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Dayanidhimaran
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுவை, கர்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாரிசு அரசியல் இப்போது முக்கிய பிரச்சனை அல்ல. நாட்டின் பிரச்சனைகள்தான் பிரதானம். வாரிசு அரசியல் மற்றும் பிராந்திய அரசியலால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை” என்றார்.
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, படுவலகிப்பி கிராமத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்களித்தார். #LokSabhaElections2019 #Kumaraswamy
காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.
இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.
தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan






