search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Elections 2019"

    தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #TNElections2019
    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கட்சி நிர்வாகிகளுடன் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தர். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    இந்த சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பார்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததுடன், தொடர்ந்து நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பணிக்கு ஊக்கம் அளித்த திமுக தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்பது எங்களின் நம்பிக்கை. இதேபோல் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக பாடுபடும்.

    தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமாக உள்ள பொன்னமராவதியில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #TNElections2019
    தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் மதியம் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 



    “1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரியகுளத்தில் 32.32 சதவீதம், பெரம்பலூரில் 39.85 சதவீதம், தருமபுரியில் 43.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும்” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #TNElections2019 #VoterTurnout
    தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.  

    “11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 22.89 சதவீதம், தென் சென்னையில் 23.87 சதவீதம், வட சென்னையில் 23.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.



    வாக்குப்பதிவு தொடங்கியபோது கோளாறு ஏற்பட்டதால் 305 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அரைமணிநேரத்தில் மாற்றப்படும். பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம்” என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #TNElections2019 #VoterTurnout


    தமிழகத்தில் இன்று பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். #TNElections2019 #ElderlyVoters
    ஈரோடு:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TNElections2019 #ElderlyVoters
    ×