search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வருமானவரி சோதனை அதிகார துஷ்பிரயோகம்- துரைமுருகன்

    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    வேலூர்:

    காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.

    இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.

    தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    Next Story
    ×