search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு மு.க.ஸ்டாலின் பிரசாரம்-  அதிமுக புகார்
    X

    தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு மு.க.ஸ்டாலின் பிரசாரம்- அதிமுக புகார்

    வாக்குச்சாவடி முன்பு பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக புகார் கூறி உள்ளது. #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்காளர்களின் மனதை மாற்றும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு தான் வாக்களித்ததாக  கூறியதுடன், மத்திய மாநில அரசுகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பொது வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    Next Story
    ×