என் மலர்
தேர்தல் செய்திகள்

சென்னை:
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை
4.புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்குப் புத்தகம்
5.பான்கார்டு
6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை
8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு
9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியஆவணம்
10. பாராளுமன்ற- சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
11.ஆதார் கார்டு
வாக்களிக்கும்போது இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் தேர்தல்ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்கு உரியவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார்.

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகப்பெரிய பாரதத்திற்கு நிலையான ஆட்சி தேவை. ஆகவே இந்த நிலையான ஆட்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்வருவார் என்று ஒட்டுமொத்த மக்களே தீர்மானித்து இருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. சார்பாக வெளியிட்டு இருக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதற்காக அந்த தேர்தல் அறிக்கையிலே பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற அத்தனை வறுமை கோட்டு மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தலையொட்டி தான் எங்களுடைய தேர்தல் கள அறிக்கை அமைந்திருக்கின்றது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் செய்வோம்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட 2-வது கட்டப்பணிக்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி விரைவில் கிடைக்க இருக்கின்றது. அனுமதி கிடைத்தவுடன் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி தொடங்கப்படும்.
அதைபோல் கோவை மாநகரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும். அதுவும் மத்திய அரசு அனுமதி பெற்று அம்மாவுடைய அரசு நிறைவேற்றும்.
அதுமட்டுமல்ல மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் அத்தனையும் விரிவாக்கப்படும். இதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. தேர்தலில் இடம் பெற்றுள்ள அறிக்கை பொய் அறிக்கை. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலம் கட்டப்பட்டு விட்டது. வேண்டும் என்றே ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் அதற்காக தி.மு.க. ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கின்றது.
கிட்டத்தட்ட 3, 4 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றோம். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் மோடி 4 இடங்களில் பேசுவார்.
எங்களுடைய பணி வேகமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.
வருகிற 22-ந்தேதி கருமந்துறையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும். அம்மா அவர்கள் இருக்கின்றபோது புதுச்சேரி உள்பட 40 இடங்களில் போட்டியிட்டோம்.
அதாவது 39 இடங்களில் 37 இடத்தில் வென்றோம். பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 39 தொகுதிகளும் வெற்றி பெற்ற கூட்டணி எங்களுடைய இந்த மெகா கூட்டணி.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami
சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டமாக செயல்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. அறிக்கையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் கூறவில்லை. #EdappadiPalaniswami #AMMK
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் ஓ.பி.எஸ். சாமி கும்பிட்டார்.
தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்வார்கள். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.
ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் இருப்பதும், பதவி கிடைக்காவிடில் விலகுவதும் வாடிக்கை. அ.தி.மு.க.வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TheniConstituency #OPS
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.
மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.
இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?
மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.
கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.
இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார். வழக்கமாக எந்த தேர்தல் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம் போல இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி கருமந்துறைக்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் பேசுகிறார்.
பின்னர் வாழப்பாடியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாலையில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவாளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்ட மன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

“மது குடிப்பவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. எனவே, குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார் அமைச்சர்.
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து கேட்டபோது, அவர் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. #TNLiquorBan #RajendraBalaji
மதுரை:
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் சுங்கச்சாவடியில் நேற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1¼ கோடி பறமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் 40 கிலோ தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சமயநல்லூர் பகுதியில் கைப்பற்றினர். அவை எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. #Parliamentelection #LSPolls
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பி பார்க்கின்ற பலமான கூட்டணியாக அமைந்திருக்கின்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற 40 பாராளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்றம் சேலம் பாராளுமன்றம் என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிற்பகல் அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் அவர் தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவில் சேலம் திரும்புகிறார்.சேலம் மாவட்டத்தில் நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் வருகிறது. எனவே அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.
தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.
தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP
பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது.
தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். #DMKmanifesto #CropLoan






