என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.
    • மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமை பெற்றுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.

    மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தலுக்கு பின் இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.

    விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்காபுரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதற்கான இடத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு பொய் பிரசாரம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
    • தமிழரின் தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல்துறை மூலம் அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட தொல்பொ ருட்களை கொண்டு கண்காட்சி அமை க்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பல்வேறு முக்கியமான வரலாற்று சான்றுகள் கண்டறி யப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு, தமிழரின் பண்பாடு மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்தியாவில் நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை யிலான காலகட்டங்க ளுக்குட்பட்ட வரலாற்று ஆவணங்கள் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டு இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. ஆனால் வெம்பக் கோட்டை பகுதியில் அதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. முதற்கட்ட அகழாய்வில் இந்த பகுதியில் இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து இந்த பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6.4.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் தற்போது வரை சுமார் 896 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், தற்கால தலைமுறையினர்கள் என அனைவரும் இந்த வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வை யிட்டு நம்முடைய பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, தொல்லியல் துறை ஆணையர் காந்தி, இயக்குநர் பொன்பாஸ்கர், துணை இயக்குநர் சிவானந்தம், வட்டாட்சியர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய வியாகுல அன்னை தேர்பவனி நடந்தது.
    • திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தும்மு சின்னம்பட்டி தூய வியாகுல அன்னை மாதா கோவில் ஆலயத்தின் சித்திரை மாத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அலங்கார தேர்பவனி நடந்தது.

    தும்மு சின்னம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் அலங்கார தேர் பவனி நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடந்தன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பெத்துலுப்பட்டி விலக்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக நிர்வாக அதிகாரி சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.

    ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • காங்கிரசார் ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் காந்தி சிலை ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நகர தலைவரும், கவுன்சிலருமான சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். ஜ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகர், டைகர் சம்சுதீன், பி.கே.துரை, பால்கனி, சிவசுப்பிரமணி, ரவிராஜா, வெங்கட்ராமன், ராஜாராம், ஸ்ரீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேனுடன் பட்டாசு திரிகள் பறிமுதல்- 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்த னர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்தத போது அதில் பட்டாசு திரிகள் இருந்தன.

    மொத்தம் 13 மூடைகளில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு திரிகள் இருந்தன. போலீசார் வேனுடன் அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனில் வந்தவர்கள் தாயில்பட்டி அண்ணா காலனிைய சேர்ந்த அருண்குமார் (வயது 26), கோட்டையூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • வியாபாரி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (57). இவர் வட்டார கல்வி அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிப்பால் ெதாடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து ரவீந்திர நாத்தின் மனைவி விமலா கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ×