search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congressman"

    • காங்கிரசார் ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் காந்தி சிலை ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நகர தலைவரும், கவுன்சிலருமான சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். ஜ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகர், டைகர் சம்சுதீன், பி.கே.துரை, பால்கனி, சிவசுப்பிரமணி, ரவிராஜா, வெங்கட்ராமன், ராஜாராம், ஸ்ரீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.
    • எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் நீக்கியது.

    அதோடு டெல்லியில் ராகுல் வசித்த வீட்டை காலி செய்யும்படி பாராளுமன்ற செயலகம் உத்தரவிட்டது. ராகுல்காந்திக்காக பலரும் தங்கள் வீட்டை தர முன்வந்துள்ளனர். எனது வீடு, ராகுல்காந்தியின் வீடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை நாடு முழுவதும் காங்கிரசார் தங்கள் வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.

    புதுவையில் முதல் வீடாக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது இல்லத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.

    மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு ஸ்டிக்கர் ஒட்டினார். நிகழ்ச்சியில் வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர் திருமுருகன், வட்டார தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளிலும் இளைஞர் காங்கிரசார் ஸ்டிக்கர் ஒட்டினர்.

    விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பெரியகரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63), காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் சக்திவேல் (25). இவர் பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ளார். சண்முகத்திற்கும் செஞ்சி- திருவண்ணாமலை சாலை புதுத்தெருவை சேர்ந்த அரங்ககாந்தி (53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அரங்ககாந்தி, டெல்லியில் தனக்கு அரசு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக சக்திவேலுக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக சண்முகத்திடம் கூறியுள்ளார்.

    இதை நம்பிய சண்முகம், அரங்ககாந்தியிடம் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அரசு பணி வாங்கித்தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய அரங்ககாந்தி, சண்முகத்திடம் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தை பெற்றார்.

    பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறி பல்வேறு ஆவணங்களை சண்முகத்திடம் அரங்ககாந்தி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை கொண்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சண்முகம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அரங்ககாந்தியை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரங்ககாந்தியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். # tamilnews
    ×