என் மலர்
விருதுநகர்
- நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.
ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.
இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.
திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.
பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.
இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.
தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ராஜபாளையம் அருகே டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உரிய வயல்வெளிகள் மற்றும் இதர காடுகளுக்கு குமிட்டி குளம் கண்மாய் பிரதானமாகும்.
இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்திற்கும், இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் இதர குடிநீர் ஆதாரங்களுக்கும் இந்த குளத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்மாயில் ஒரு கும்பல் 5 ஜே.சி.பி. எந்திரங்கள், 20 டிராக்டர்களை வைத்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 100 முதல் 150 டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.1,600- க்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த பகுதி வழியாக அதி வேகமாக மணல் கடத்தல் வாகனங்கள் இயக்கப் படுவதை கண்டித்து பொது மக்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்து பொதுமக்கள் வாக னங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த மணல் கடத்தல் காரர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.
அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கோரி ஜமீன் கொல்லங் கொண்டான் பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- அருப்புக்கோட்டையில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பாலையம்பட்டி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள், துணை இயக்குனர் வேளாண்மை (மத்திய அரசு திட்டம்) சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் ராஜா பாபு, செல்வி ரமேஷ், தொழில் வல்லுநர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.
- இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது.
விருதுநகர்
தமிழகத்தில் புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுவோர் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதனை தவிர்க்க மின் இணைப்பு களை பெறவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி புதிதாக மின் இணைப்பு பெற விரும்பு வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக ெபருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தாலும் இடைத்தரகர்கள் மற்றும் சிலர் மூலம் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவ தாகவும், இல்லை என்றால் பல்வேறு குறைகளை கூறி காலம் தாழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஒருவர் கூறுகையில், வீட்டு மின் இணை ப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்தேன்.
ஆனால் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தரப்படும் என கூறுகிறார் கள் என வேதனையுடன் தெரிவித்தார்.
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
- மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகர்
சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.
- மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
விருதுநகர்:
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமை பெற்றுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.
மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தலுக்கு பின் இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்காபுரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதற்கான இடத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு பொய் பிரசாரம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
- தமிழரின் தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல்துறை மூலம் அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட தொல்பொ ருட்களை கொண்டு கண்காட்சி அமை க்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பல்வேறு முக்கியமான வரலாற்று சான்றுகள் கண்டறி யப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு, தமிழரின் பண்பாடு மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை யிலான காலகட்டங்க ளுக்குட்பட்ட வரலாற்று ஆவணங்கள் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டு இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. ஆனால் வெம்பக் கோட்டை பகுதியில் அதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. முதற்கட்ட அகழாய்வில் இந்த பகுதியில் இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து இந்த பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6.4.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதில் தற்போது வரை சுமார் 896 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், தற்கால தலைமுறையினர்கள் என அனைவரும் இந்த வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வை யிட்டு நம்முடைய பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, தொல்லியல் துறை ஆணையர் காந்தி, இயக்குநர் பொன்பாஸ்கர், துணை இயக்குநர் சிவானந்தம், வட்டாட்சியர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.
கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூய வியாகுல அன்னை தேர்பவனி நடந்தது.
- திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தும்மு சின்னம்பட்டி தூய வியாகுல அன்னை மாதா கோவில் ஆலயத்தின் சித்திரை மாத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அலங்கார தேர்பவனி நடந்தது.
தும்மு சின்னம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் அலங்கார தேர் பவனி நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
- அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடந்தன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பெத்துலுப்பட்டி விலக்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக நிர்வாக அதிகாரி சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






