என் மலர்
விருதுநகர்
- வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
- புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
- நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி மையம் திறப்பு நடந்தது.
- ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோடாங்கி கலை கூடத்தின் நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய திறப்பு விழா நடந்தது. அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்குனர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'நம் நாட்டில் சங்க காலம் தொட்டு கலைகள் செழித்து வளர்ந்துள்ளது. திருத்தங்கலில் சங்க கால மக்கள் கலைகளை வளர்த்தது குறித்த சான்றுகள் உள்ளது. கலைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத் திற்கு என்று தனித்துவமாக பல்வேறு கலைகள் உள்ளது,' என்றார்.
இந்த கோடங்கி கலைக்கூடத்தில் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி, 8 வகையான கரகம், மான் கொம்பு, சிலம்பம், பொய்க்கால் குதிரை, காவடி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கலை இலக்கிய மாணவர்களுடன் இணைந்து நாட்டுப்புற கலைகள் குறித்து ஆராய்ச்சி யும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார்.
- தென்மாநில அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது.
- விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.
- பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது20). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்தார். இவரது தாத்தா சின்னபெருமாள் பராம ரிப்பில் இருந்து வந்தார். இரவு நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருப்பாராம். இதனை அவரது பாட்டி கண்டித்துள்ளார்.
இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிமுத்து பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருத்தங்கல் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னபெருமாள் அங்கு சென்று பார்த்தபோது அது மாரிமுத்து என தெரியவந்தது.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள அனுபன் குளத்தை சேர்ந்தவர் ரமேஷ்(34). பட்டாசு ஆலையில் வேலைக்கு ஆள் அனுப்பும் பணியை குத்ததைக்கு செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகள் ஆனந்திக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தி கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ரமேசும், அவரது மகன் முகுந்தனும் முத்துசாமியுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் ரமேசுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் கடன் வாங்கியும் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் பகுதியை சேர்ந்தர் இந்திரா(37). இவர் அதே பகுதியில் வசிக்கும் பரமேசுவரி என்பவருக்கு சுயஉதவிக்குழு மூலமாக ரூ.75 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பரமேசுவரி குடும்பத்துடன் மாயமானார். இதனால் கடன் தவணையை இந்திரா செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவில் இருந்து கடனை முழுமையாக செலுத்தும்படி இந்திரா விடம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இந்திராவின் கணவர் தளவாய்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர் கோவில் திருவிழாவிற்காக விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராம் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூளக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
- யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.
- நெல் வயல்களில் கருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
- அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் தென்காசி சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் போன்ற பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெல் விளைந்த நிலையில் நெல்மணிகளுக்கு பதிலாக காய்ந்த நிலையில் அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது. ஏக்கர் கணக்கில் இது பரவி வருவதால் இதை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்துதல், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ரா சைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க கேட்டுக்கொண்டனர்.
இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமாறு தேவதானம் சேர்த்து ஒரு பகுதி நெல் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.
ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.
இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.
திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.
பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.
இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.
தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ராஜபாளையம் அருகே டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உரிய வயல்வெளிகள் மற்றும் இதர காடுகளுக்கு குமிட்டி குளம் கண்மாய் பிரதானமாகும்.
இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்திற்கும், இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் இதர குடிநீர் ஆதாரங்களுக்கும் இந்த குளத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்மாயில் ஒரு கும்பல் 5 ஜே.சி.பி. எந்திரங்கள், 20 டிராக்டர்களை வைத்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 100 முதல் 150 டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.1,600- க்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த பகுதி வழியாக அதி வேகமாக மணல் கடத்தல் வாகனங்கள் இயக்கப் படுவதை கண்டித்து பொது மக்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்து பொதுமக்கள் வாக னங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த மணல் கடத்தல் காரர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.
அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கோரி ஜமீன் கொல்லங் கொண்டான் பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- அருப்புக்கோட்டையில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பாலையம்பட்டி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள், துணை இயக்குனர் வேளாண்மை (மத்திய அரசு திட்டம்) சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் ராஜா பாபு, செல்வி ரமேஷ், தொழில் வல்லுநர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.
- இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது.
விருதுநகர்
தமிழகத்தில் புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுவோர் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதனை தவிர்க்க மின் இணைப்பு களை பெறவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி புதிதாக மின் இணைப்பு பெற விரும்பு வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக ெபருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தாலும் இடைத்தரகர்கள் மற்றும் சிலர் மூலம் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவ தாகவும், இல்லை என்றால் பல்வேறு குறைகளை கூறி காலம் தாழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஒருவர் கூறுகையில், வீட்டு மின் இணை ப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்தேன்.
ஆனால் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தரப்படும் என கூறுகிறார் கள் என வேதனையுடன் தெரிவித்தார்.






