search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antiquity"

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
    • தமிழரின் தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல்துறை மூலம் அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட தொல்பொ ருட்களை கொண்டு கண்காட்சி அமை க்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பல்வேறு முக்கியமான வரலாற்று சான்றுகள் கண்டறி யப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு, தமிழரின் பண்பாடு மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்தியாவில் நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை யிலான காலகட்டங்க ளுக்குட்பட்ட வரலாற்று ஆவணங்கள் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டு இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. ஆனால் வெம்பக் கோட்டை பகுதியில் அதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. முதற்கட்ட அகழாய்வில் இந்த பகுதியில் இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து இந்த பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6.4.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் தற்போது வரை சுமார் 896 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், தற்கால தலைமுறையினர்கள் என அனைவரும் இந்த வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வை யிட்டு நம்முடைய பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, தொல்லியல் துறை ஆணையர் காந்தி, இயக்குநர் பொன்பாஸ்கர், துணை இயக்குநர் சிவானந்தம், வட்டாட்சியர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பழைய மாவட்ட கலெக்டரக அருங்காட்சியகத்தில் பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடைபெறும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார்.

    இதையடுத்து தஞ்சை அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டு அறிந்தார்.

    இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

    ×