என் மலர்
விருதுநகர்
- 13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
- போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே சாமி நத்தம் பகுதியை சேர்ந்த சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தெருவில் செல்லும்போது ஈஞ்சார் பகுதிைய சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.
சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அவரை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு மாரிமுத்து தகராறு செய்தார்.
ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது சிறுமியை தான் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனால் தனக்கு திருமணம் செய்து தர ேவண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மகளிடம் நடந்ததை பற்றி தாய் கேட்டு தெரிந்து கொண்டார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.
சிவகாசி மீனம்பட்டி பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறுவன் தந்தையிடம் கூறினார். அவரது தந்தை உடனடியாக சிவகாசி கிழக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் மீது வழக்குப்பதியப்பட்டது.
- கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் கோபாலன், நரிக்குடி ஊரக வளர்ச்சித் துறை உதவி என்ஜினீயர் பெரோஸ்கான் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 80 பெண்கள் உள்பட 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், பால்கனி, ஜாபர், டைகர் சம்சுதீன், ரவிராஜா, சக்தி, வெங்கட்ராமன், வாசுதேவா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான
ஆர்.சங்கர்கணேஷ் செய்திருந்தார்.
- பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்.
- சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி மீனம்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற சோதனையிட்டனர். அப்போது பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகே உள்ள முட்புதரில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக மீனம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(57), கலைச்செல்வன்(25) ஆகியோரை கைது செய்த சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மீனம்பட்டி பகுதியில் இருந்த பட்டாசு ஆலை ஒன்றில் தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு 5 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்தோணியம்மாள்(60) என்பவரை கைது செய்தனர்.
- முத்துப்பாண்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது முதல் கணவர் முத்துராஜ். இவர்களது மகன் முத்துப் பாண்டி(வயது17).
முத்துராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு தனது மகனுடன் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார்.
ராமலட்சுமியின் மகன் முத்துப்பாண்டி நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவரை சிலர் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் சென்ற முத்துப்பாண்டி, இரவில் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.
இந்தநிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு பின்புறம் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரை யாரோ மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தியதில், முத்துப்பாண்டி என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முத்துப்பாண்டியின் தாய் ராமலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கொலை செய்து பிணமாக கிடப்பது தனது மகன் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். மேலும் சற்று நேரத்திற்கு முன் வீட்டில் இருந்த தனது மகன் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து கதறினார்.
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர்.
முத்துப்பாண்டியை இரவு நேரத்தில் அழைத்து சென்றது யார்? என்று அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்களது பகுதியை சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார், செல்லம் என்ற விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தனது மகனை அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டதும், அவர்கள் தான் முத்துப்பாண்டியை கொன்றதும் தெரியவந்தது. அஜித் உள்ளிட்ட 4 பேரும் கலைக்குழுவை சேர்ந்த வாலிபர்கள் ஆவர். அவர்களுடன் முத்துப்பாண்டிக்கு பழக்கமும் இருந்துள்ளது.
கலைக்குழு வாலிபர்கள் 4 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் வரையில் முத்துப்பாண்டி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவர்கள், நேற்று இரவு முத்துப்பாண்டியை அழைத்துச்சென்று பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதில் ஆத்திரமடைந்த 4 பேரும் முத்துப்பாண்டியை பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியால் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியும் கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அஜித் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மனைவி மாரி(29). கணவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை சேர்ந்தவர் பெரிய கருப்பன்(வயது30), தொழி லாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததார். மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. இதனை அவரது மனைவி இருவக்காள் கண்டித்துள்ளார்.இதனால் விரக்தி யடைந்த பெரிய கருப்பன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தை ேசர்ந்தவர் கந்தசாமி(வயது63). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது கந்தசாமி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மதுைர அரசு ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே ெசாத்து தகராறில் தீர்த்துக்கட்டினர்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் முருகன்(வயது40), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
முத்துசாமியின் 2-வது மனைவிக்கு ஞானகுருசாமி, காளிதாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினருக்கும், 2-வது மனைவி குடும்பத்தி னருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மகன் மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குழந்தைகள் இருவரும் முன்னே நடந்து செல்ல, பின்னால் அவர்களின் பைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றார்.
ஜீவா நகர் பகுதியில் சென்றபோது, திடீரென்று 2 பேர் ஓடி வந்து அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறுிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் இருந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.
அதில் அவர் முத்துசாமியின் 2-வது மனைவியின் மகன் ஞான குருசாமி(38) என்பதும், தனது சகோதரர் காளி தாசுடன் சேர்ந்து அண்ணன் முருகனை கொலை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.
- முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
- அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வர வேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி் செயலர் செல்வ ராஜன் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ேபாலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி கலந்து ெகாண்டு 'எண்ணமே வாழ்வு' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதா வது:-
இந்தியாவின் மாபெரும் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை ஆகும். கோடிக்க ணக்கான மாணவர்கள் பள்ளிப்படிப்போடு நின்று விடும் சூழலில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கல்லூரியில் சென்று கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தி னால் மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதை உணர்ந்து கல்விக் கற்க வேண்டும்.
கல்வி ஏழைகளுக்கு விளக்கு போன்றது. அது பெண்களுக்கு பாதுகாப்பை நல்குகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு உதவக் கூடியது கல்வி ஒன்றே. கல்வி மட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர்த்தும். உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது. பெற்ற பிள்ளை கள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது.
மாணவர்கள் கல்லூரி பருவத்தில் மகிழ்ச்சியை மட்டும் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளாமல் படிப்பையும், திறமையையும் தம் இருகண்களாக கொண்டு செயல்பட வேண்டும். கல்வியோடு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முத்து லட்சுமி வரவேற்றார். வணி கவியல் கணினி பயன்பாட்டி யல் துறையின் தலைவர் நளாயினி சிறப்பு விருந்தி னரை அறிமுகம் செய்தார். முடிவில் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
- அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக் குட்டம் மற்றும் பள்ளப்பட்டி கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்தம் ரூ.81லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்ன ரசு மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராம பகுதி கள் வரை பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும்.
அதற்கு இணையாக கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி யாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
- ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
திருச்சுழி சேதுபதி அரசு பள்ளியில் மதுரை ரமணகேந்திரம் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். 10,12-ம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ரமண கேந்திராவின் தலைவர் ரங்கசாமி, உதவித் தலைவர் பூவாடை கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர்.கலாராணி ரங்கசாமி, சங்கர், வக்கீல் சந்திரசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பாத்திமா,திருச்சுழி நூலக வாசகர்கள் வட்ட தலைவர் சுந்தர் அழகேசன்,காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மஞ்சுளா சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி நடந்தது.
- 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி எனும் பொருண்மையில் ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சித்திட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்புரையாற்றி னார். கல்லூரி செயலர் செல்வராசன் தலைமையுரை ஆற்றினார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வின் முதல் நாள் முதல் அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இணை பேராசிரியர் ஜான்சேகர் கலந்துகொண்டு '21-ம் நூற்றாண்டு ஆசிரியர்' எனும் தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.
இரண்டாம் நாள் அமர்வில் 'வாசித்தாலும் எழுதுதலும்' என்னும் தலைப்பில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் சந்திரபோஸ் உரையாற்றி னார். மூன்றாம் நாள் அமர்வில் 'கற்பித்தலின் விளைவு அடிப்படையி லான வினாத்தாள் வடி வமைக்கும் முறை' எனும் தலைப்பில் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
நான்காம் நாள் அமர்வில் மதுரை பாத்திமா கல்லூரியின் ஆங்கி லத்துறை இணைப்பேராசி ரியர் சைராபானு 'மாற் றத்தை கற்றுக்கொடுத்தல்' எனும் தலைப்பில் உரை யாற்றினார். ஐந்தாம் நாள் அமர்வில் 'தன்நிலை உணர்தல்' எனும் தலைப் பில் நெல்லை கள்ளிடைக் குறிச்சி குண்டலினி யோகா பேராசிரியர் கற்பக விநா யகம் சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழ்த்துறை தலைவர் அமுதா நன்றி கூறினார். இந்நிகழ்வில் 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






