என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வர வேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி் செயலர் செல்வ ராஜன் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ேபாலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி கலந்து ெகாண்டு 'எண்ணமே வாழ்வு' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதா வது:-

    இந்தியாவின் மாபெரும் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை ஆகும். கோடிக்க ணக்கான மாணவர்கள் பள்ளிப்படிப்போடு நின்று விடும் சூழலில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கல்லூரியில் சென்று கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தி னால் மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதை உணர்ந்து கல்விக் கற்க வேண்டும்.

    கல்வி ஏழைகளுக்கு விளக்கு போன்றது. அது பெண்களுக்கு பாதுகாப்பை நல்குகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு உதவக் கூடியது கல்வி ஒன்றே. கல்வி மட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர்த்தும். உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது. பெற்ற பிள்ளை கள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது.

    மாணவர்கள் கல்லூரி பருவத்தில் மகிழ்ச்சியை மட்டும் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளாமல் படிப்பையும், திறமையையும் தம் இருகண்களாக கொண்டு செயல்பட வேண்டும். கல்வியோடு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முத்து லட்சுமி வரவேற்றார். வணி கவியல் கணினி பயன்பாட்டி யல் துறையின் தலைவர் நளாயினி சிறப்பு விருந்தி னரை அறிமுகம் செய்தார். முடிவில் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
    • அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக் குட்டம் மற்றும் பள்ளப்பட்டி கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்தம் ரூ.81லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்ன ரசு மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராம பகுதி கள் வரை பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும்.

    அதற்கு இணையாக கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி யாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    திருச்சுழி சேதுபதி அரசு பள்ளியில் மதுரை ரமணகேந்திரம் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். 10,12-ம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை ரமண கேந்திராவின் தலைவர் ரங்கசாமி, உதவித் தலைவர் பூவாடை கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர்.கலாராணி ரங்கசாமி, சங்கர், வக்கீல் சந்திரசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பாத்திமா,திருச்சுழி நூலக வாசகர்கள் வட்ட தலைவர் சுந்தர் அழகேசன்,காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மஞ்சுளா சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி நடந்தது.
    • 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி எனும் பொருண்மையில் ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சித்திட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்புரையாற்றி னார். கல்லூரி செயலர் செல்வராசன் தலைமையுரை ஆற்றினார்.

    இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வின் முதல் நாள் முதல் அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இணை பேராசிரியர் ஜான்சேகர் கலந்துகொண்டு '21-ம் நூற்றாண்டு ஆசிரியர்' எனும் தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.

    இரண்டாம் நாள் அமர்வில் 'வாசித்தாலும் எழுதுதலும்' என்னும் தலைப்பில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் சந்திரபோஸ் உரையாற்றி னார். மூன்றாம் நாள் அமர்வில் 'கற்பித்தலின் விளைவு அடிப்படையி லான வினாத்தாள் வடி வமைக்கும் முறை' எனும் தலைப்பில் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

    நான்காம் நாள் அமர்வில் மதுரை பாத்திமா கல்லூரியின் ஆங்கி லத்துறை இணைப்பேராசி ரியர் சைராபானு 'மாற் றத்தை கற்றுக்கொடுத்தல்' எனும் தலைப்பில் உரை யாற்றினார். ஐந்தாம் நாள் அமர்வில் 'தன்நிலை உணர்தல்' எனும் தலைப் பில் நெல்லை கள்ளிடைக் குறிச்சி குண்டலினி யோகா பேராசிரியர் கற்பக விநா யகம் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் தமிழ்த்துறை தலைவர் அமுதா நன்றி கூறினார். இந்நிகழ்வில் 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
    • நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.

    அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
    • உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் போதைத் தடுப்பு மன்றத்தின் சார்பில், குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் ராஜபாளையம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்

    சிக்கலான சூழ்நிலைகளில் மாணவிகள் உடனடியாக, 1098, 181, 100, 155260 என்ற புகார் எண்களில் தொடர்புகொண்டு உதவி கேட்பதும் குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, காவலர் சங்கரேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

    • பா.ஜ.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.

    திருச்சுழி

    பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருச்சுழி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பி னர் கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டி வழிமு றைகள், பிரசார முறைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் பேசினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு அணிகள் பிரிவு களின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.

    • கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருச்சுழி துைண போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன் என்பவ ரின் மனைவி தாடக நாச்சி யார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை அவர் வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    இதையடுத்து தாடக நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.

    கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வேளாண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன டைந்து வரும் பயனாளி களின் இருப்பிடத்திற்கு சென்று கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி வடபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மகாகனி மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வருவதையும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள கம்பு விதை பண்ணையினையும், புதுக்கோட்டை கிராமத்தில் உணவு மற்றும் சத்து தானியங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெற்று வருவதையும் பார்வையிட்டார்.

    பின்னர் செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளையும், செவலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை பண்ணை யும், நடையனேரி கிரா மத்தில் கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரிடப்பட்டுள்ள (கே4 ரகம்) வயலினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயி களுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பண்ணைக் கருவிகள், இதர பொருட்க ளான உளுந்து, நிலக்கடலை மினி கிட் மற்றும் பேட்டரி தெளிப்பான்களையும் கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சுமதி, சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×