என் மலர்
விருதுநகர்
- அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறி உள்ளார்.
- இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விருதுநகர் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகள் கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் இணையம் வழியாக 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கு இசைவு வழங்கு வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி 10.2.2021 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய வர்களுக்கு 31.12.2022 வரை 6 மாத காலம் அவகாசம் வழங்கப் பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் 30.6.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கங்களை அணுகலாம்.
மேலும் https://tcp.tn.gov.in என்ற இணைய முகவரி யில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
- தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:
மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.
ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.
அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
- அண்ணாமலை பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது.
விருதுநகர் :
விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று, சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேணடுமென கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. ஆனால் எங்களை பொறுத்தமட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை, ஒரு தனி நபர் செயல்படவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாக இயங்குகிறார். அவர் நேர்மையான அதிகாரி என்ற முறையில் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியானவர்தான். ஆனால் அவரது பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. நாங்களும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
- ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொரு ளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 7 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 1 தொழில் முனைவோருக்கு ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 250 மதிப்பிலும், சிறு பான்மையினர் பிரிவைச் சார்ந்த 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் 1 மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு ரூ.45 ஆயிரத்து 350 மதிப்பிலும் என மொத்தம் 12 புதிய தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசின் மானியத் தொகை பெறுவதற்கான ஆணை களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புதிய தொழில் தொடங்க கடனு தவி வேண்டி விண்ணப்பித்த இளைஞருக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் வியாபார நோக்கத்திற்காக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதியப்பட்டது.
- புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார்.
விருதுநகர்
திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தெய்வசிகாமணி. நரிக்குடி-திருப்புவனம் மாநில ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு, கடை கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் வீடு, கடையை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை ெநடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் கட்டிடத்தை இடிக்க வந்தனர். அப்போது தந்தையும்-மகனும் பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அங்கிருந்த ேபாலீசார் உடனடியாக தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் வீடு, கடையை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மாரியப்பன், தெய்வசிகாமணி தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
- போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே சாமி நத்தம் பகுதியை சேர்ந்த சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தெருவில் செல்லும்போது ஈஞ்சார் பகுதிைய சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.
சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அவரை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு மாரிமுத்து தகராறு செய்தார்.
ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது சிறுமியை தான் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனால் தனக்கு திருமணம் செய்து தர ேவண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மகளிடம் நடந்ததை பற்றி தாய் கேட்டு தெரிந்து கொண்டார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.
சிவகாசி மீனம்பட்டி பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறுவன் தந்தையிடம் கூறினார். அவரது தந்தை உடனடியாக சிவகாசி கிழக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் மீது வழக்குப்பதியப்பட்டது.
- கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் கோபாலன், நரிக்குடி ஊரக வளர்ச்சித் துறை உதவி என்ஜினீயர் பெரோஸ்கான் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 80 பெண்கள் உள்பட 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், பால்கனி, ஜாபர், டைகர் சம்சுதீன், ரவிராஜா, சக்தி, வெங்கட்ராமன், வாசுதேவா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான
ஆர்.சங்கர்கணேஷ் செய்திருந்தார்.
- பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்.
- சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி மீனம்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற சோதனையிட்டனர். அப்போது பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகே உள்ள முட்புதரில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக மீனம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(57), கலைச்செல்வன்(25) ஆகியோரை கைது செய்த சிவகாசி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மீனம்பட்டி பகுதியில் இருந்த பட்டாசு ஆலை ஒன்றில் தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு 5 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்தோணியம்மாள்(60) என்பவரை கைது செய்தனர்.
- முத்துப்பாண்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது முதல் கணவர் முத்துராஜ். இவர்களது மகன் முத்துப் பாண்டி(வயது17).
முத்துராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு தனது மகனுடன் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார்.
ராமலட்சுமியின் மகன் முத்துப்பாண்டி நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவரை சிலர் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் சென்ற முத்துப்பாண்டி, இரவில் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.
இந்தநிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு பின்புறம் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரை யாரோ மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தியதில், முத்துப்பாண்டி என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முத்துப்பாண்டியின் தாய் ராமலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கொலை செய்து பிணமாக கிடப்பது தனது மகன் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். மேலும் சற்று நேரத்திற்கு முன் வீட்டில் இருந்த தனது மகன் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து கதறினார்.
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர்.
முத்துப்பாண்டியை இரவு நேரத்தில் அழைத்து சென்றது யார்? என்று அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்களது பகுதியை சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார், செல்லம் என்ற விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தனது மகனை அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டதும், அவர்கள் தான் முத்துப்பாண்டியை கொன்றதும் தெரியவந்தது. அஜித் உள்ளிட்ட 4 பேரும் கலைக்குழுவை சேர்ந்த வாலிபர்கள் ஆவர். அவர்களுடன் முத்துப்பாண்டிக்கு பழக்கமும் இருந்துள்ளது.
கலைக்குழு வாலிபர்கள் 4 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் வரையில் முத்துப்பாண்டி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவர்கள், நேற்று இரவு முத்துப்பாண்டியை அழைத்துச்சென்று பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதில் ஆத்திரமடைந்த 4 பேரும் முத்துப்பாண்டியை பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியால் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியும் கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அஜித் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மனைவி மாரி(29). கணவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை சேர்ந்தவர் பெரிய கருப்பன்(வயது30), தொழி லாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததார். மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. இதனை அவரது மனைவி இருவக்காள் கண்டித்துள்ளார்.இதனால் விரக்தி யடைந்த பெரிய கருப்பன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தை ேசர்ந்தவர் கந்தசாமி(வயது63). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது கந்தசாமி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மதுைர அரசு ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே ெசாத்து தகராறில் தீர்த்துக்கட்டினர்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் முருகன்(வயது40), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
முத்துசாமியின் 2-வது மனைவிக்கு ஞானகுருசாமி, காளிதாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினருக்கும், 2-வது மனைவி குடும்பத்தி னருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மகன் மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குழந்தைகள் இருவரும் முன்னே நடந்து செல்ல, பின்னால் அவர்களின் பைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றார்.
ஜீவா நகர் பகுதியில் சென்றபோது, திடீரென்று 2 பேர் ஓடி வந்து அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறுிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் இருந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.
அதில் அவர் முத்துசாமியின் 2-வது மனைவியின் மகன் ஞான குருசாமி(38) என்பதும், தனது சகோதரர் காளி தாசுடன் சேர்ந்து அண்ணன் முருகனை கொலை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.






