search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "babhishekam"

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவில் கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை(23-ந்தேதி) காலையில் சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. 24-ந்தேதி காலையில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.

    காலை 10.30 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன. வருகிற 25-ந்தேதி காலையில் கோபூஜை, பூர்ணாகுதி, சங்கல்ப பூஜை நடக்கிறது.

    யாகசாலை பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன், அசோகன், ரகுராமன், மான்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானத்தை ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விழாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கே.வி.கே.ஆர்.பிரபாகரன் மற்றும் செட்டிகுறிச்சி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    ×