என் மலர்
விருதுநகர்
- மைக்செட்காரர் மீது தாக்குதல் நடந்தது.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது26). மைக்செட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் அங்கு பொங்கல் திருவிழா நடந்தது. இதற்காக கருப்புசாமி கோவில் அருகே கணேசன் அம்மன் டவர் அமைத்தார். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது. அதில் சமரசம் ஏற்படாததால் அந்த இடத்தை இரு தரப்பினரும் பயன்படுத்த தாசில்தார் தடை விதித்தார். இதைத்தொடர்ந்து அம்மன் டவரை அகற்றும் பணிகளில் கணேசன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர் தரப்பை சேர்ந்த கருப்பன், செந்தூர், சுந்தர் மற்றும் சிலர் அங்கு வந்து கணேசனுடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
- பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.
அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.
இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.
பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி மற்றும் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாய்பாபா கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி கற்பகவல்லி ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன், துணைத் தலைவர் அரவிந்த், மேனே ஜிங் டிரஸ்டி மோனிஷா ஆகியோர் தலைமையில் பள்ளி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் அனுசியா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். தினந்தோறும் காலை அல்லது மாலையில் யோகா செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பள்ளி முதல்வர் எடுத்து ரைத்தார். முடிவில் மாண வர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.
- காதலனுடன் இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரெபேக்காள். இவர்களுக்கு சாந்தி(வயது21) என்ற மகளும், ஐசக் என்ற மகனும் உள்ளனர். சாந்தி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி மற்றும் ஐசக் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். ரெபேக்காள் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, சாந்தி வீட்டில் இல்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அப்போது ஐசக்கின் செல்போனுக்கு ஒரு நபர் போனில் அழைத்தார். அவர் சாந்தியை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துக்கொண்டு பாலக்காடு செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது.
- ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் காட்சி அளிக்கிறார்.
இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவில் கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை(23-ந்தேதி) காலையில் சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. 24-ந்தேதி காலையில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.
காலை 10.30 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன. வருகிற 25-ந்தேதி காலையில் கோபூஜை, பூர்ணாகுதி, சங்கல்ப பூஜை நடக்கிறது.
யாகசாலை பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன், அசோகன், ரகுராமன், மான்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானத்தை ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.
விழாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கே.வி.கே.ஆர்.பிரபாகரன் மற்றும் செட்டிகுறிச்சி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாமுண் டீஸ்வரி. இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.
திருமண ஆசை காட்டி பலமுறை சாமுண் டீஸ்வரியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் நாகராஜூக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது சாமுண்டீஸ்வரி திருமணம் செய்து கொள்ளுமாறு நாக ராஜிடம் கேட்டார். ஆனால் நாகராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ் வரி புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத் தலை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். 25 நாட்கள் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நாகராஜ் வேலைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்தபோது, நாகராஜ் வீட்டாருக்கும், சாமுண் டீஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகைகள் கொண்டு வந்தால் மட்டுமே நாகராஜூ டன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக நாகராஜின் தாய் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும் நாகராஜூம், தாயுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தி யுள்ளார். இதையடுத்து மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் நாகராஜ், அவரது தாய் வரதம்மாள், வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
- வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அன்னப்பராஜா பள்ளியில் யோகா தினவிழா நடந்தது.
- உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜபாளையம் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளை கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவன் சுதர்சன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
- இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை ஏ.பி.டி.எஸ்.எம்.பி.எஸ். மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இதில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளும், ஆலோச னைகளும் வழங்கப்படும்.
மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக் கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சில்லறை வியாபாரிகள் முன்னேற்றத்திற்கும் உதவி செய்யப்படும் என்று யூனியன் வங்கி அதிகாரி கூறினார்.
- கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர் தின நிகழ்ச்சி நடந்தது. ராஜ பாளையம் கிளை மேலாளர் ஜேம்ஸ் வரவேற்றார். மண்டல மேலாளர் ரஞ்சித் பேசியதாவது:-
வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை அதிகரிக்கவும், பெரிய வணிகர்கள் மட்டுமின்றி சில்லறை வியாபாரிகளும் முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது தருவதற்காக இந்த வாடிக்கையாளர் தினம் நடத்தப்படுகிறது.
மேலும் வீடு கட்டவும், வியாபாரம் செய்யவும், வீடு, நிலம் போன்றவை வாங்குவதற்கும், இதர வங்கி பரிமாற்றங்களுக்கும் சேவை அளிக்கப்படும். இந்தியாவிலேயே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் 5-வது சிறந்த வங்கி யாக யூனியன் வங்கி உள்ளது. மேலும் வாடிக்கை யாளர்களின் அனைத்து தேவைகளுக்கும் வங்கி மேலாளர் அணுகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வாடிக்கை யாளர்கள்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விழாவில் துணை மண்டல மேலாளர் சோமசுந்தரம், கிளை மேலா ளர்கள் ஜேம்ஸ், செட்டியார்பட்டி சக்தி ஆனந்த மூர்த்தி, சேத்தூர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.






