என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
    • குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது தந்தை கூலித் தொழிலாளி. தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி முடித்துவிட்டு மாலையில் சிவகாசியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மாணவி பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனாலும் தந்தையின் பிடியில் இருந்து மாணவி தப்பி வீட்டிற்கு வெளியே வந்தார். சிறிது நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம், தந்தை தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதை கண்ணீருடன் மாணவி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கணவரை கண்டித்துள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கைது செய்தனர்.

    • பஸ் உரிமையாளரிடம் ரூ.5½லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது54). தனியார் பஸ் உரிமையாளர். இவரிடம் திருப்பதி என்பவர் காசாளராக 2 ஆண்டுகள் வேலை பார்த்தார்.

    அப்போது டோல்கேட் கட்டணம் பஸ் உரிமையாளர் சங்க கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக கொடுத்த ரூ.5½லட்சம் பணத்தை திருப்பதி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மகாலிங்கத்திற்கு தெரியவந்தது. அவர் திருப்பதியிடம் விசாரித்த போது அவர் கடந்த மார்ச் மாதத்தில் வேலையை விட்டு சென்றுவிட்டார்.

    மேலும் மோசடி செய்த பணம் குறித்து எதுவும் கூறாமல் இருந்தார். இதை தொடர்ந்து அருப்புக் கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது58). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் அருளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகளிர் சுயஉதவிக்குழு செயல்பாட்டை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சந்தித்து கலந்துரை யாடினார். அதன்படி சாத்தூர் நகராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி, அமையவுள்ள இடத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஸ்கர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தும் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று சேவு, முறுக்கு உள்ளிட்ட திண் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்டறிந்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலை கடைகளிலும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    • கல்லூரி மாணவி- இளம்பெண் மாயமாகினர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த வர் சுந்தரராஜன். இவரது மகள் சுபஸ்ரீ(வயது23). முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு கள் செய்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சுபஸ்ரீ கூறியுள்ளார்.

    அதற்கு அவரை பற்றி விசாரித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீ மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. இதை தொடர்ந்து பாண்டியன்நகர் மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் சுந்ததராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சி புரத்தை சேர்்ந்த நடராஜ். இவரது மகள் அங்காளஈஸ்வரி(19). காக்கிவாடன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை ேபாலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    • மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.83 ஆயிரம் திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன்(வயது43). இவர் அங்குள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் எடுத்தார். மேலும் கையில் ரூ.3 ஆயிரம் வைத்திருந்தார். பணத்தை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வைத்தார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அவரது மகன் படிக்கும் பள்ளியில் இருந்தும் பேசுவதாகவும், மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பள்ளிக்கு வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த சரவணன் பள்ளிக்கு சென்றார்.

    மோட்டார் சைக்கிளை பள்ளியின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை காணவில்லை. யாேரா மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அருப்புக்கோட்ைட மேஜித்ரேட் கோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகள் ராஜேஸ்வரி(19). விருதுநகரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் இருந்ததால் ராஜேஸ்வரி விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தாய் சமுத்திரகி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சக்திகுளம் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவம் பார்த்தும் குணமாகாததால் அவர் விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மனைவி காளியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமையவில்லை.
    • அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி.

    அருப்புக்கோட்டை :

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு 500 மதுக்கடைகளை மட்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

    தமிழகத்தில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமையவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. அங்கு ஊழல் இல்லை என கூற முடியாது. ஆனால் அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அதிகாரத்துக்கு வந்த பிறகு நேர்மையாக இருப்பதுதான் சாதனை.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறுவதால் எந்த கட்சிக்கும் பாதிப்பு வராது. வரும் காலங்களில் ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்குகள் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. மாற்றத்தை எதிர்நோக்குபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

    செந்தில் பாலாஜி மீதான விசாரணை வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இது காலம் கடந்த செயல். ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் பழிவாங்கும் செயலாகத்தான் இதனை பார்க்க முடிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் எங்கே சென்றார்கள்?

    செந்தில் பாலாஜியின் விஷயத்தில் அவரை காக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்கிறாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். மொத்தத்தில், இது அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • விருதுநகர் வாலிபர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 17). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவர் மதுரை யில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கான கூலி வாங்குவதில் முத்துப் பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமா ருக்கும் பிரச்சினை ஏற்பட் டது.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித்குமார், முத்துப்பா ண்டியை கொலை செய்ய திட்டமிட்ட தாக தெரிகிறது.

    இதற்காக சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை வீட்டில் இருந்து வெளியே அஜித்குமார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் முத்துப்பாண்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையில் அங்கு உள்ள ஜக்கம்மாள் கோவில் பின்புறம் முத்துப்பாண்டி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், அஜித்கு மார், அவரது நண்பர்கள் செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் முத்துப்பா ண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகர் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.

    மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.

    ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×