என் மலர்
விருதுநகர்
- கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம் உர வகைகளை காட்சிப்படுத்தியது.
- ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உர வகைகள், ஏடி.டி.42 வகை நெல்விதை, வேப்பம் புண்ணாக்கு துகள்கள் மற்றும் மண்புழு உரம் காட்சிபடுத்தப்பட்டது.
மேலும் இந்த உரங்கள் தொடர்பான தெளிவான விளக்க உரையுடன் கூடிய பதாகைகளும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் புதிய வகை உரங்களை ஆர்வமுடன் விசாரித்து வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் விருது நகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, இணை பதிவாளர், அலுவலக துணை பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லி புத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் காந்திராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய விருதுநகர் மண்டல மேலாளர் ஜீவானந்தம், கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் செல்வராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
- டாஸ்மாக் கடை கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பள்ளிமடம் பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடைக்குள் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், கடையில் இருந்த விற்பனையாளர்களை வெட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.6லட்சத்து 40ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக்சரண்,சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொள்ளை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் போலீசாரால் தோடப்பட்டு வந்த சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பிரவீன் (22) என்பவர் சிக்கினார். செல்போன் சிக்னல் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த திருச்சுழி போலீசார், அங்கு அதிரடியாக சென்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- அமைச்சர் புதிய கால்நடை மருந்தகங்களை திறந்து வைத்தார்.
- துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் ரூ. 121.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுராமன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் கூறியதாவது:-
நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும். அதற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் விதமாக வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, ஆனைக்குட்டம், சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், திருவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் தலா ரூ. 40.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 121.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயமடைந்தார்.
- சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள மேட்ட மலையில் சிவகாசி சாத்தூர் மெயின் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளா னது. இதில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள், 3 சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதிய சரக்கு வாகனம், சாலையோர டீக்கடையில் அமர்ந்திருந்த பட்டாசு ஆலை தொழிலாளி சோலையப்பன்(வயது68)என்பவர் மீதும் மோதியது.
இதில் படுகாய மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் நெல்லையை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
- மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விருதுநகர்
தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.
விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.
செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலைய ரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களை விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கு கின்றனர்.
விருதுநகர் மாவட்டமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
- குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
- வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 63). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த பெருமாள்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
- சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.
அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிகள், மருத்துவ மனை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள பொது இடங்களில் மது குடிப்பதும், சில நேரங்களில் போதையில் தகராறில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி 31-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஜெயகவிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து கூறினார்.
- விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுகந்தி 2023-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளதாவது:-
மருத்துவசேவையில் முழு அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றியமைக்காக விருது பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். குறிப்பாக பழங்குடியின தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்க செய்து, இறப்பு இல்லாத நிலைக்கு சாதனை புரிந்து பெருமை சேர்த்து உள்ளீர்கள். தங்கள் சேவை இன்னும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர் மீது தாக்குதல் நடந்தது.
- டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமாா(வயது33). இவரது மனைவி வைரமுத்து செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் சாப்பிட வந்திருந்தார். இதைப்பார்த்த வைரமுத்து செல்வி மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த வைரமுத்துசெல்வி உள்பட 3 பேர் ஜெயக்குமாரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது32). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கலைசங்கரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.
சம்பவத்தன்று மாரீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கலைசங்கர் மனைவியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






