என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்களை தாக்கி நகை பறிப்பு
    X

    வாலிபர்களை தாக்கி நகை பறிப்பு

    • வாலிபர்களை தாக்கி நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா கட்டனாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அகத்தீஸ்வரன்(வயது42). இவர் பிள்ளையார்குளம் கல் குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த கல்லங்குளம் பகுதியை சேர்ந்த சோனை, ராமச்சந்திரன் உள்பட 6பேர் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

    அப்போது முதலாளியிடம் சென்று பணம் கேளுங்கள் என்று அகத்தீஸ்வரன் அவர்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் அகத்தீஸ்வரனை தாக்கினர்.

    அதனை தடுக்க வந்த அகத்தீஸ்வரனின் சகோதரருக்கும் அடி-உதை விழுந்தது. மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் அகத்தீஸ்வரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×