டாஸ்மாக் கடை கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைது

டாஸ்மாக் கடை கொள்ளையில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பிரவீன்
பிரவீன்
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பள்ளிமடம் பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடைக்குள் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், கடையில் இருந்த விற்பனையாளர்களை வெட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.6லட்சத்து 40ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக்சரண்,சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் போலீசாரால் தோடப்பட்டு வந்த சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பிரவீன் (22) என்பவர் சிக்கினார். செல்போன் சிக்னல் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த திருச்சுழி போலீசார், அங்கு அதிரடியாக சென்று அவரை கைது செய்தனர்.

அவரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com