search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு
    X

    போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு கொடுத்தனர்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான காங்கிரசார், விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்பு ணர்ச்சி காரணமாகவே சிலர் எதிர்க்கிறார்கள்.

    சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.

    யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவிட்டிருப்பதும் சமத்து வம், சமதர்மம் நிறைந்த மக்களாட்சி முறையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் சர்ச்சையை ஏற்படுத் தும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தி ருப்பதும் சட்டப்படி குற்றமா கும். எனவே தமிழக கவர் னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×