search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
    X

    ராஜபாளையத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

    • கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கட்டிட வரைப்பட அனுமதி பெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார்.

    அப்போது கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் காளி முத்துவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×