என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ (1-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெம்பக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன் பாண்டியன். இவர் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு கீழராஜ குலராமன் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அவர்களது ஆலோசனை களின்படி பொன் பாண்டியன் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச பணத்தை காளி முத்துவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளிமுத்துவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    லஞ்ச வழக்கில் காளிமுத்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கீழராஜ குல ராமன் ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு துணை தலைவர் குருவைய்யா மற்றும் பஞ்சாயத்து கிளார்க் கருத்தபாண்டி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாக பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை வலியுறுத்தி இன்று கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

    இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியலால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்தது.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (24). முத்துகிருஷ்ணனும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.

    மோட்டார் சைக்கிளை முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்தார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் ஆராய்ச்சி ஊரணி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    பின்தலையில் பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் கிடந்த மணிகண்டன் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38).இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் சாத்தூரில் இருந்து சத்திரப்பட்டி நோக்கி சென்றார். அப்போது எதிர்திசையில் அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிச்செல்வம்(21) மோட்டார் சைக்கிளில் மாசானம் மகன் அபிகுட்டியுடன்(21) வந்தார். மாரிச்செல்வம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல். டவர் அருகே சர்வீஸ் ரோட்டில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மாரிமுத்து ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

    மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

    இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 3,100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் விருதுநகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.
    • விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்து தெருவை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி-ருக்குமணி. இவர்களது மகன் வீரமணிகண்டன் (வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் இவர், "தூய்மை இந்தியா" விழிப்புணர்வை வலியுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் வீரமணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கடந்த 10-ந்தேதி சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் 21-ந்தேதி காஷ்மீரை சென்றடைந்தார். விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

    • வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
    • ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.

    இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைதானார்கள்.
    • போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    சூலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டதில், அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தியது தூத்துக்கு டி மாவட்டம் சிவகளை மண்கோட்ட புரத்தை சேர்ந்த ராஜூ என்ற ராஜபாண்டி (வயது29), சேலம் கீழநாயக்கன் பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(23) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா கடத்தலில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெரிய புளியம்பட்டி முள் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசரித்தபோது, கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர் விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (22) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர்

    சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர், அழகிய மீனாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கிருதுமால் நதியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை,புண்யாக வாசனம், கோ, லெட்சுமி பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை ரூ.40 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு இணையாக தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.

    கட்டுமான பொருட்கள் தரமாக உள்ளதா?, கான்கீரிட் பில்லர் கம்பிகள் தரமாக உள்ளதா? என அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராஜபாளையம் தொகுதி யின் வளர்ச்சிக்காக தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ெரயில்வே மேம்பால திட்டம் போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதோ அதுபோல் ராஜபாளையம் தொகுதி மக்கள் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கோ, மதுரை ஆஸ்பத்திரிக்கோ அலையாமல் இருப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிழ்ச்சியில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பால சுப்பிரமணியன், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×