என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
    • பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அவருக்கு ராஜ பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான, நேரு பவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், பொதுச் செய லாளர் சக்தி மோகன்,

    ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    த.மா.கா.வில் இருந்து விலகிய டைகர் சம்சுதீன் மாணிக்கம் தாகூர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் மாணிக்க தாகூர், எம்.பி. கூறிய தாவது:-

    2014-ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66-ஆக இருந்தது. பிரதமர் மோடி அதே விலைக்கு தற்போது பெட்ரோலை கொடுப்பாரா? கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது கொடுமையானது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.

    மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக வெறுப்பு அரசியலை பா.ஜ.க. பரப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது 60 நாட்கள் மட்டுமே ேவலை கிடைக்கிறது. முழுமையாக 100 நாட்கள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். வருடத்திற்கு 365 நாட்களில் 60 நாட்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 300 நாட்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

    பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் கூடி அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடி முறைப்படி அறிவிப்பார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் நடந்தது.
    • வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து முகாமின் மூலம் பயன்பெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வ தற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    நமது விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 7226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 4,421 பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

    இதில் 3,332 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும், 595 பேர் பொறி யியல் கல்லூரிகளிலும், 48 பேர் மருத்துவக் கல்லூரி களிலும் சேர விண்ணப் பித்துள்ளனர்.

    உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 2,805 மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மேல் படிப்பில் சேர்ப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தற்போது 586 மாணவர்கள் மேல் படிப்பில் சேராமல் உள்ளனர்.

    அவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் வகையில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில், இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 202 மாணவ- மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பும் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது36). இவர் அங்குள்ள கல்குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    திருக்கண்ணனுக்கும், கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அழகியவள்ளி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.

    குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் திருக்கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவர் தினமும் மதுகுடித்தப்படி இருந்துள்ளார்.

    கடந்த 25-ந்தேதியும் மதுகுடித்து விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அழகிய வள்ளி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, கமுதி கோவிலாங்குளம் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு அருகே சென்றனர். அங்கு வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் திருக்கண்ணன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 3 நாட்களாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருக்கண்ணன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஆனால் அவரது உடலில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனால் அவர் குடிபோதையில் தவறி விழுந்ததில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து திருக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் திருக்கண்ணனின் வீட்டிற்கு அருகே இருந்தவர்களிடம் விசாரித்த போது, கடந்த 25-ந் தேதி திருக்கண்ணன் மற்றும் அவரது மனைவிக்கிடையே தகராறு நடந்த விவரத்தை தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதில் திருக்கண்ணனை அவரது மனைவி அழகியவள்ளி தாக்கியதில் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    அது தொடர்பாக திருக்கண்ணனின் மனைவி அழகியவள்ளியிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
    • மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

    மலை அடிவாரமான தென்றல் நகர் அணைத்தலை பகுதியில் உள்ள தோப்புக்கு 12 வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அப்பகுதி யில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தி கடித்தது. இதை பார்த்த பிரபல தொழிலதிபர் குவைத்ராஜா நாய்களை விரட்டி விட்டு மானை காப்பாற்றினார்.

    நாய்கள் கடித்து குதறியதில் மான் படுகாய மடைந்தது. இதுகுறித்து குவைத்ராஜா வனத் துறைக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த அவர்கள் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின் வனத்துறை அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனவர் இளைய ராஜா கூறுகையில், காய மடைந்த மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணமாகிய பின் மானை வனப்பகுதியில் விடுவோம் என்றார்.

    • பாம்பு கடித்து பெண் பலியானார்.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஆர். ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரது மனைவி அன்னலட்சுமி (வயது44). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற போது அங்கு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அன்னலட்சுமி உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அன்னலட்சுமியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்ன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
    • பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம் தெருவில் உள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோவில். இங்கு 36-வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூைஜகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 7 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது43). இவரது 2-வது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தனது உறவினரான மவுலி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 9-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிைலயில் அவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கண்ணம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(33). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. குழந்தைகளுடன் மனைவி எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி கோபாலன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(31). இவரது மனைவி அருணா. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடைக்கு செல்வதாக கூறி சென்ற அருணா மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் முத்தாள் நகரை சேர்ந்தவர் வல்லவராஜ். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை களுடன் மாயமானார். அருகில் வசிக்கும் அன்னக்கிளி என்பவர் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்காளஈஸ்வரியின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி ஆசாரி காலனியை சேர்்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ேஜாதிலட்சுமி(23). அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இரவில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தவர் அதிகாலையில் மாய மானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி சீனிவாச நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(40). இவரது மகன் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் உள்ள உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மேட்டமலையை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் காமாட்சி பட்டாசு ஆலையில் வேலை பார்்த்து வருகிறார். அங்கு அவருக்கு விக்கி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென மாய மானார். உறவினர்கள் விசாரித்ததில் விக்கியும் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாணிக்கவாசகரின் சிறப்புகள் குறித்து முத்துச்சாமி, தனலட்சுமி பக்தி சொற்பொழிவு ஆற்றினர்.

    மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பஞ்ச வாத்தியங்கள், சங்க நாதம் முழங்கி, திருவாசகம் பாடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சக்திவேல். உறவினர் இவரது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் ைசக்கிளில் வெளியே சென்றார்.

    உவர்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள நரிக்குடியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது45), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்குள்ள ஒரு கிணற்றின் சுவற்றில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து மனைவி முத்து கணபதி கொடுத்த புகாரின்பேரில் மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டு கள் பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலா கும். வைணவ - சைவ சமய வழிபாட்டிற்கு முன்னு தாரணமாக விளங்கும் இந்த கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில், சிவபெருமான் கருநெல்லிநாதர் சுவாமியாக அருள் பாலிக்கும் சிவன் கோவிலும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும். மேலும் மலை உச்சியில் முருகப்பெருமான் கோவிலும் அமைந்துள்ளது.

    இத்தனை சிறப்பு மிக்க இந்த கோவிலில், ஆனி பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் சுவாமி க்கும், ஸ்ரீசெங்க மலத்தாயார் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க ஆனி பிரமோற்சவ திருவிழா கொடி யேற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங் காரத்தில் எழுந்த ருளிய ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • முன்னாள் படைவீரர்கள், தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது/
    • அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர் களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நாளை (28ந்தேதி) காலை 11 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள், படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×