என் மலர்
விருதுநகர்
- விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகரில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
மாணிக்கம்தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவ லர்கள் சிரமமின்றி பணி புரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறை களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ரூ.309.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்துமதி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, அருப்புக் கோட்டை நகரத்திற்கு விஜயராஜா, காட்வின் தன்மா, பவித்ரா ஆகியோ ரும், அருப்புக் கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கு அன்புராஜ், சரவணகுமார், சிந்துஜா, வடக்கு ஒன்றியத்திற்கு பிரவீன், பெரிய கருப்பசாமி, முருகேஸ்வரி, சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு சோலைமுத்து, பிரவீன்குமார், வைஜெயந்தி, விருதுநகர் கிழக்கு ஒன்றியத்திற்கு கார்த்திக், மணிகண்டன், பானுப்பிரியா, ராஜபாளையம் தொகுதிக்கு பிரபாகரன், சதீஷ், லட்சுமி லக்ஷனா, ராஜபாளையம் நகரம் வடக்கு ஒன்றியத்துக்கு பிரபாகரன், முத்துராஜ், யோக சித்ரா, ராஜபாளையம் நகரம் தெற்கு ஒன்றியத்துக்கு பாலன், மருது பாண்டியன், கவிதா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு லிங்கேஸ்வரன், ரூபன் மிசி ஷெல்டன், கற்புக்கரசி, ராஜபாளையம் செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு சாமுவேல் சகாயம், லெனின், விஜயலட்சுமி, சேத்தூர் பேரூராட்சிக்கு ஜெயசூர்யா, ராஜதுரை, சின்னதாய் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூர் தொகுதிக்கு வீர சுப்பிரமணியன், ராகேஷ், செல்வி, சாத்தூர் நகரத்திற்கு முனீஸ்வரன், வினோத், பொன் செல்வி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு வெங்க டேசன், கருப்பசாமி, திவ்யா, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு கணேசன், ரங்கராஜ், ராஜ லட்சுமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு மருதுராஜ், முரளி, தமிழரசி, ராஜபா ளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு முத்துக்கு மாரசாமி, புதியராஜ் ஸ்டாலின், சந்தான சுந்தரி, சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு ஹரிஹரன்.
மதன்குமார், மகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு செந்தில்குமார், ஆனந்தகுமார், கலைஞர் சுதந்திர ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்திற்கு அஜ்மல் கான், விக்னேஸ்வ ரன், காளீஸ்வரி, ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியத்துக்கு தன்ராஜ், சுந்தர்ராஜன், சீதாலட்சுமி, வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு வள்ளிநாயகம், வீர அழகு, இந்துஜா, மம்சாபுரம் பேரூராட்சிக்கு வல்லரசு, மாரிசெல்வம், சந்தான புஷ்பம், வ.புதுப்பட்டி பகுதிக்கு சஞ்சய் குமார், வில்லா ராஜா, விஜய லட்சுமி, வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு வீரக்குமார், விஜய பிரகாஷ், பஞ்சு, எஸ்.கொடிக்குளம் பகுதிக்கு மனோ சுந்தர், சாதிக் அலி, மகாலட்சுமி, சுந்தரபாண்டியம் பகுதிக்கு விக்னேஷ், நாகராஜ், முத்துலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- குப்பை கொட்டும் இடமாக கோவில் அன்னதான கூடம் மாறியது.
- கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பூமிநாதன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
பூமிநாதன் கோவில் வளாகத்தில் அன்ன தான கூடம் உள்ளது. இதன் பின்புறமாக காம்பவுண்டு சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குடியி ருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
மேலும் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதால் நாள் கணக்கில் குப்பைகள் மலை போல் தேங்கும் அவலம் உள்ளது. எனவே கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை ெதாட்டியை வைக்காமல் வேறுபகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புகழ்பெற்ற இந்த கோவிலின் சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு அதிகமானோர் வருவார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
இனிமேலாவது அதனை அகற்றி கோவில் சுற்று வட்டார பகுதியை தூய்மை யாக வைத்திருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.
- முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார்.
விருதுநகர்
சிவகாசி தனியார் ஆஸ்பத்திரி பின்புறமுள்ள பகுதியில் சிவகாசி நடராஜர் காலனியை சேர்ந்த மகேந்திரன்(24), தெற்கு தெருவை சேர்ந்த மகேந்திரகுமார், முடங்கிநாடார் தெருவை சேர்ந்த சிவகிரி(20) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அரிவாளை காட்டி அந்த பகுதியில் சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களை பிடித்து விசாரித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி வெள்ளைசாமி யாபுரம் தெருவை ேசர்ந்த வர் தினேஷ்குமார்(24). இவர் சிவகாசி வெம்பக் கோட்டை ரோட்டில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டு அந்த பகுதியில் சென்றவர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். தகவல் அறிந்த டவுன் ேபாலீசார் அங்கு வந்து தினேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
- பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அவருக்கு ராஜ பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான, நேரு பவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், பொதுச் செய லாளர் சக்தி மோகன்,
ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
த.மா.கா.வில் இருந்து விலகிய டைகர் சம்சுதீன் மாணிக்கம் தாகூர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் மாணிக்க தாகூர், எம்.பி. கூறிய தாவது:-
2014-ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66-ஆக இருந்தது. பிரதமர் மோடி அதே விலைக்கு தற்போது பெட்ரோலை கொடுப்பாரா? கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது கொடுமையானது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.
மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக வெறுப்பு அரசியலை பா.ஜ.க. பரப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது 60 நாட்கள் மட்டுமே ேவலை கிடைக்கிறது. முழுமையாக 100 நாட்கள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். வருடத்திற்கு 365 நாட்களில் 60 நாட்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 300 நாட்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.
பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் கூடி அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடி முறைப்படி அறிவிப்பார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் நடந்தது.
- வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து முகாமின் மூலம் பயன்பெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வ தற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
நமது விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 7226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 4,421 பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 3,332 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும், 595 பேர் பொறி யியல் கல்லூரிகளிலும், 48 பேர் மருத்துவக் கல்லூரி களிலும் சேர விண்ணப் பித்துள்ளனர்.
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 2,805 மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மேல் படிப்பில் சேர்ப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தற்போது 586 மாணவர்கள் மேல் படிப்பில் சேராமல் உள்ளனர்.
அவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் வகையில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில், இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 202 மாணவ- மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடந்தது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பும் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
- மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது36). இவர் அங்குள்ள கல்குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
திருக்கண்ணனுக்கும், கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அழகியவள்ளி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.
குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் திருக்கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவர் தினமும் மதுகுடித்தப்படி இருந்துள்ளார்.
கடந்த 25-ந்தேதியும் மதுகுடித்து விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அழகிய வள்ளி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, கமுதி கோவிலாங்குளம் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு அருகே சென்றனர். அங்கு வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் திருக்கண்ணன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் பிணமாக கிடந்தார்.
அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 3 நாட்களாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருக்கண்ணன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஆனால் அவரது உடலில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனால் அவர் குடிபோதையில் தவறி விழுந்ததில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து திருக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
இந்த நிலையில் திருக்கண்ணனின் வீட்டிற்கு அருகே இருந்தவர்களிடம் விசாரித்த போது, கடந்த 25-ந் தேதி திருக்கண்ணன் மற்றும் அவரது மனைவிக்கிடையே தகராறு நடந்த விவரத்தை தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதில் திருக்கண்ணனை அவரது மனைவி அழகியவள்ளி தாக்கியதில் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.
அது தொடர்பாக திருக்கண்ணனின் மனைவி அழகியவள்ளியிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
- மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மலை அடிவாரமான தென்றல் நகர் அணைத்தலை பகுதியில் உள்ள தோப்புக்கு 12 வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அப்பகுதி யில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தி கடித்தது. இதை பார்த்த பிரபல தொழிலதிபர் குவைத்ராஜா நாய்களை விரட்டி விட்டு மானை காப்பாற்றினார்.
நாய்கள் கடித்து குதறியதில் மான் படுகாய மடைந்தது. இதுகுறித்து குவைத்ராஜா வனத் துறைக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த அவர்கள் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் வனத்துறை அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனவர் இளைய ராஜா கூறுகையில், காய மடைந்த மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணமாகிய பின் மானை வனப்பகுதியில் விடுவோம் என்றார்.
- பாம்பு கடித்து பெண் பலியானார்.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ஆர். ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரது மனைவி அன்னலட்சுமி (வயது44). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற போது அங்கு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அன்னலட்சுமி உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே அவர்கள் அன்னலட்சுமியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்ன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
- பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தர்மாபுரம் தெருவில் உள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோவில். இங்கு 36-வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.
கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூைஜகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






