என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
    X

    9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

    • 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.
    • மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் சிறுமியை எதிரில் வசிக்கும் வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்ேறார் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அவர்கள் தங்களது மகளை எதிர் வீட்டில் விட்டு சென்றார். அப்போது மாரிமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

    இதுகுறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரி சாந்தி விசாரணை நடத்தி சிவகாசி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×