search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் வாலிபர் பலி
    X

    விபத்தில் வாலிபர் பலி

    • விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சக்திவேல். உறவினர் இவரது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் ைசக்கிளில் வெளியே சென்றார்.

    உவர்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள நரிக்குடியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது45), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்குள்ள ஒரு கிணற்றின் சுவற்றில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து மனைவி முத்து கணபதி கொடுத்த புகாரின்பேரில் மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×