search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
    X

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
    • பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அவருக்கு ராஜ பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான, நேரு பவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், பொதுச் செய லாளர் சக்தி மோகன்,

    ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    த.மா.கா.வில் இருந்து விலகிய டைகர் சம்சுதீன் மாணிக்கம் தாகூர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் மாணிக்க தாகூர், எம்.பி. கூறிய தாவது:-

    2014-ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66-ஆக இருந்தது. பிரதமர் மோடி அதே விலைக்கு தற்போது பெட்ரோலை கொடுப்பாரா? கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது கொடுமையானது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.

    மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக வெறுப்பு அரசியலை பா.ஜ.க. பரப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது 60 நாட்கள் மட்டுமே ேவலை கிடைக்கிறது. முழுமையாக 100 நாட்கள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். வருடத்திற்கு 365 நாட்களில் 60 நாட்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 300 நாட்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

    பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் கூடி அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடி முறைப்படி அறிவிப்பார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×