search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murde"

    • விருதுநகர் வாலிபர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 17). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவர் மதுரை யில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கான கூலி வாங்குவதில் முத்துப் பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமா ருக்கும் பிரச்சினை ஏற்பட் டது.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித்குமார், முத்துப்பா ண்டியை கொலை செய்ய திட்டமிட்ட தாக தெரிகிறது.

    இதற்காக சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை வீட்டில் இருந்து வெளியே அஜித்குமார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் முத்துப்பாண்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையில் அங்கு உள்ள ஜக்கம்மாள் கோவில் பின்புறம் முத்துப்பாண்டி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், அஜித்கு மார், அவரது நண்பர்கள் செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் முத்துப்பா ண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகர் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீடு புகுந்து வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைகாளி. இவரது மகன் அழகர் (வயது21), கட்டிட தொழி லாளி.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் அழகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.

    இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் மற்றும் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபரை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கொலையில் ஈடுபட்டது நிலையூரை சேர்ந்த அழகு சேதுபதி(25) மற்றும் திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்த அஜய்(24), பாண்டித்துரை(25), ஆதித்தன்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில், பேரையூரை சேர்ந்த ராமர் என்பவரது தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு ராமரின் தம்பி லட்சுமணன் கிணற்றில் விழுந்து இறந்தார். தம்பியின் சாவுக்கு அழகர் தான் காரணம் என கருதிய அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கொலையில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×