search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
    X

    மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

    • மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி மற்றும் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×