search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்
    X

    கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்

    • கல்லூரி மாணவி- இளம்பெண் மாயமாகினர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த வர் சுந்தரராஜன். இவரது மகள் சுபஸ்ரீ(வயது23). முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு கள் செய்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சுபஸ்ரீ கூறியுள்ளார்.

    அதற்கு அவரை பற்றி விசாரித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீ மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. இதை தொடர்ந்து பாண்டியன்நகர் மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் சுந்ததராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சி புரத்தை சேர்்ந்த நடராஜ். இவரது மகள் அங்காளஈஸ்வரி(19). காக்கிவாடன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை ேபாலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×