என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி-வாலிபர் தற்கொலை
    X

    கல்லூரி மாணவி-வாலிபர் தற்கொலை

    • கல்லூரி மாணவி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகள் ராஜேஸ்வரி(19). விருதுநகரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் இருந்ததால் ராஜேஸ்வரி விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தாய் சமுத்திரகி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சக்திகுளம் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவம் பார்த்தும் குணமாகாததால் அவர் விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மனைவி காளியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×