என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா
    X

    இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

    • இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    திருச்சுழி சேதுபதி அரசு பள்ளியில் மதுரை ரமணகேந்திரம் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். 10,12-ம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை ரமண கேந்திராவின் தலைவர் ரங்கசாமி, உதவித் தலைவர் பூவாடை கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர்.கலாராணி ரங்கசாமி, சங்கர், வக்கீல் சந்திரசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பாத்திமா,திருச்சுழி நூலக வாசகர்கள் வட்ட தலைவர் சுந்தர் அழகேசன்,காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மஞ்சுளா சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×