search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
    X

    கல்லூரி விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்

    • கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வர வேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி் செயலர் செல்வ ராஜன் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ேபாலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி கலந்து ெகாண்டு 'எண்ணமே வாழ்வு' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதா வது:-

    இந்தியாவின் மாபெரும் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை ஆகும். கோடிக்க ணக்கான மாணவர்கள் பள்ளிப்படிப்போடு நின்று விடும் சூழலில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கல்லூரியில் சென்று கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தி னால் மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதை உணர்ந்து கல்விக் கற்க வேண்டும்.

    கல்வி ஏழைகளுக்கு விளக்கு போன்றது. அது பெண்களுக்கு பாதுகாப்பை நல்குகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு உதவக் கூடியது கல்வி ஒன்றே. கல்வி மட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர்த்தும். உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது. பெற்ற பிள்ளை கள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது.

    மாணவர்கள் கல்லூரி பருவத்தில் மகிழ்ச்சியை மட்டும் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளாமல் படிப்பையும், திறமையையும் தம் இருகண்களாக கொண்டு செயல்பட வேண்டும். கல்வியோடு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முத்து லட்சுமி வரவேற்றார். வணி கவியல் கணினி பயன்பாட்டி யல் துறையின் தலைவர் நளாயினி சிறப்பு விருந்தி னரை அறிமுகம் செய்தார். முடிவில் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    Next Story
    ×