என் மலர்
நீங்கள் தேடியது "behavior training"
- ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி நடந்தது.
- 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி எனும் பொருண்மையில் ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சித்திட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்புரையாற்றி னார். கல்லூரி செயலர் செல்வராசன் தலைமையுரை ஆற்றினார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வின் முதல் நாள் முதல் அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இணை பேராசிரியர் ஜான்சேகர் கலந்துகொண்டு '21-ம் நூற்றாண்டு ஆசிரியர்' எனும் தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.
இரண்டாம் நாள் அமர்வில் 'வாசித்தாலும் எழுதுதலும்' என்னும் தலைப்பில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் சந்திரபோஸ் உரையாற்றி னார். மூன்றாம் நாள் அமர்வில் 'கற்பித்தலின் விளைவு அடிப்படையி லான வினாத்தாள் வடி வமைக்கும் முறை' எனும் தலைப்பில் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
நான்காம் நாள் அமர்வில் மதுரை பாத்திமா கல்லூரியின் ஆங்கி லத்துறை இணைப்பேராசி ரியர் சைராபானு 'மாற் றத்தை கற்றுக்கொடுத்தல்' எனும் தலைப்பில் உரை யாற்றினார். ஐந்தாம் நாள் அமர்வில் 'தன்நிலை உணர்தல்' எனும் தலைப் பில் நெல்லை கள்ளிடைக் குறிச்சி குண்டலினி யோகா பேராசிரியர் கற்பக விநா யகம் சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழ்த்துறை தலைவர் அமுதா நன்றி கூறினார். இந்நிகழ்வில் 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






