என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது.
    • மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    எட்டயபுரம்:

    திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 31 வயதான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    முருகப் பெருமானை வேண்டி மாலை அணிந்துள்ள அவர் அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.

    நேற்று அவர் தனது நண்பர்கள் செல்வராஜ், விஜயகுமார், மகேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோருடன் காரில் சுவாமி மலைக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு சென்றனர்.

    அவர்களது கார் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்த செல்வராஜ் தூக்கம் கலைவதற்காக காரை ஓரமாக நிறுத்தி தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது. இதில்கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. நொறுங்கிய காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர்.

    இந்த கோர விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார் விருது.
    • 6 ஊழியர்கள், 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய ரெயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரெயில்வே ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய அளவில் "அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார்" (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 சிறந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபர் அலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    டெல்லியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் 69-வது ரயில்வே வார விழாவில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி பணியாளர்களை கவுரவிக்க உள்ளார்.

    கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 17 -ந் தேதி இரவு 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரெயில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தது.

    ரெயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதை அதிகாரியிடம் இருந்து எச்சரிக்கை தகவலை பெற்று ஸ்டேஷன் மாஸ்டர் சில நிமிடங்களில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார்.

    இந்த நிலையில் பயணிகள் கோபமடைந்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் விடிந்தவுடன் ரெயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டு ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர்.

    இதையடுத்து மீட்பு படையினர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    உடனடியாக நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் அலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    • ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திருச்செந்தூர்:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்தை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 14 மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    • ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரெயில்கள் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

    சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

    தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.

    தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    மேலும், தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக தகவல்.
    • போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடியது போல் நடித்ததும் அம்பலமாகியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில், சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் தேடுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்புதான் சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றுள்ளார். மேலும், போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    • சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கானி, ஏரல் பகுதிகளில் உள்ள பாலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    • மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
    • மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
    • மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்த பாண்டி என 3 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதனை தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் எழுதிய கடிதத்தையும் வாங்கி கிழித்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கடிததத்தில், எங்களது மகன் ஏன் இறந்தான் என்று தெரியவில்லை. பாசமாக வளர்த்த மகனே போய் விட்டான். நாங்கள் இருந்து என்ன செய்ய? மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இனி நாங்கள் வாழ்வதில் எங்களுக்கு அர்த்தம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. 

    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
    • பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி. அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கும், அவர்களது மூத்த மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சிறுவன் கருப்பசாமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாய் மற்றும் உதடு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதபரிசோதனை தகவலில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிபடுத்துகின்றனர்.

    அதன்படி குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் நேற்று இரவும் சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் அந்த வீட்டு பகுதியில் சுற்றி வந்தது.

    மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

    • சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
    • இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் காலையில் இருந்தே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.

    இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூபம் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதய குமார் மற்றும் உயிரிழந்தார்.
    • உயிரிழந்த பாகனின் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேகர்பாபு வழங்கினார்.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

    பின்னர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    இதனையடுத்து யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கினார். 

    ×