என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.
    • ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்ண்டு கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

    திருச்சி மாநகர், புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் பகுதியில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா அடங்கிய குழுவினர் சோதனை மேற கொண்டனர்.

    அப்போது, கேரள மாநில பதிவெண் கொண்ட, கருப்பு நிற சொகுசு கார் வந்தது. பறக்கும்படையினர் அதை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.

    இதனால் தேர்தல் அதிகாரிகள் மஞ்சு வாரியரிடம் விவரங்களை கேட்டுக் கொண்டே சோதனை செய்தனர். இதனிடையே நடிகை மஞ்சு வாரியர் காரில் இருக்கும் தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மஞ்சு வாரியாருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.

    கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க, மஞ்சு வாரியரின் காரை விரைவாக சோதனை செய்து, அவரை வேகமாக தேர்தல் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சோதனையில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    • ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
    • ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும்.

    காவேரிப்பட்டினம்:

    வருகிற 9-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை 11-ந் தேதி கொண்டாடப்படுகிறதையொட்டி காவேரிப்பட்டணம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக இருந்தது.

    காவேரிப்பட்டணம் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் தற்போது இப்பகுதியில் ஆடுகளை பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை. இதனால் ஆடுகளுக்கு இப்பகுதியில் விற்பனை அதிகமாய் உள்ளது. மேலும் ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திரு விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்த ருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகி றார்.

    இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

    அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வருகின்ற 15-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகி றது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
    • இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் என்று கூறவில்லை. கூட்டணியிலேயே ஒற்றுமையாக இல்லாதபோது, இவர்கள் எப்படி பிரதமரை தேர்வு செய்வார்கள்.

    மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றால் அந்த கூட்டணி நன்றாக இருந்திருக்கும். அவர் அந்த கூட்டணியில் சேர்ந்ததால் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அந்த கூட்டணி வலுவாக இருப்பதுபோல் மக்களிடம் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் தமிழகத்தில் இந்தியா கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. டெபாசிட் வாங்காது.

    நாம் பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் அந்த கட்சியுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது என்று அவர் விமர்சிக்கிறார். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

    தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி கிடையாது. இந்த தேர்தலில் தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    10 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த நாம் (அ.தி.மு.க.) பல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளோம். 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன செய்தது. 3 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் 3½ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மு.க.ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை.

    இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு அவர் என்ன செய்தார் என்று கூறமுடியுமா? அது முடியாததால் தான், எதை எதையோ கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, தி.மு.க. ஆட்சி மட்டும்தான். இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.

    அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்ற ஏழை எளிய குடும்பத்தினர் பயனடையும் வகையில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முற்றிலும் நிறுத்திவிட்டது. மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன்.
    • நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன்

    திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி காக்காயம்பட்டி நால்ரோடு பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயை எனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பள்ளிக்கூடங்களில், ஏனைய தேவை உள்ள அத்தனை இடங்களிலும் மனுக்களாக பெறப்பட்டு அவர்களின் தேவைகளை முழுவதுமாக செய்து கொடுத்துள்ளேன்.

    அரசு பள்ளிக்கூடங்களுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம்.ஆகவே அந்த 17 கோடியை முழுவதுமாக செவழித்து விட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.

    ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். மீண்டும் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்வேன்.

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்து வைப்பேன்.

    வேட்டை நாயக்கர்கள் என்கிறவர்கள் அவர்களது ஜக்கம்மா தெய்வத்திற்கு முயல் ரத்தம் வைத்து வழிபடுகிறார்கள். காட்டுக்குள் வேட்டைக்கு செல்ல கூடாது என அந்த சமூகத்தினருக்கு ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த 50 பேரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு வாரம் அங்கி வைத்திருந்து பாராளுமன்றத்தை காட்டி, தாஜ் மஹாலை காட்டி. அதற்கான மந்திரியிடம் பேச வைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து பிரச்சனையை சொன்னோம்.

    இதன் பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பதில் வந்தது. அதில் வேட்டை நாய்கள் தடுக்கப்பட்ட விலங்கினங்கள் அல்ல. அவற்றை பயன்படுத்தலாம் என்று பதில் வந்தது. எனவே நீங்கள் தைரியமாக வேட்டை நாய்களை பயன்படுத்தலாம். அதையும் மீறி வனத்துறையினர் தடுத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் பேசினார்.

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் முயற்சியில் மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி இருந்தனர்.
    • அப்பா வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக வாக்காளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியது அனைவரும் நெகிழ வைத்திருக்கிறது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் முயற்சியில் மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி இருந்தனர். வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்த கடிதம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த கடிதத்தில் மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதாவது:-

    உங்கள் மகன், மகள் எழுதும் கடிதம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் அம்மா, அக்கா, அண்ணன், தம்பி எல்லோரும் நலமா? அப்பா வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த வாக்குப்பதிவில் தாங்கள் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதோடு, இத்தகவலை அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அக்கா, அண்ணன் உள்ளிட்டவர்களுக்கு தெரிவியுங்கள். அருகில் வசிக்கும் நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி தவறாமல் வாக்களிக்களித்து எங்களுக்கு வழிகாட்டிட தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!

    இத்துடன் 19-ந் தேதி வாக்களித்த விரலின் அடையாள மையுடன் வீடு திரும்பும் அப்பா அம்மாவை வரவேற்க காத்திருக்கும் உங்களின் அன்பு மகன்/மகள்

    ஜனநாயக கடமையாற்ற இருக்கும் தங்களின் மகன், மகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    கடிதம் எழுதிய பள்ளி குழந்தைகள்.

    கடிதம் எழுதிய பள்ளி குழந்தைகள்.

    இப்படி எழுதி இருந்த கடிதங்களை பின்பு மாணவ-மாணவிகள் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று கடிதங்களை தங்களின் பெற்றோரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் ஆணையம் தாண்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.
    • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும் என்பது உள்பட 74 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் வைகோ கூறுகையில், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது.

    சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்றார்.

    • பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.
    • ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே சமயபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக சமயபுரம் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடுகள் மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் சமயபுரம் சந்தைக்கு வருகின்றனர்.

    இந்த வார சந்தையில் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழக்கமாக ஆடுகள் விற்பனை நடைபெறும், பண்டிகை கால கட்டங்களில் சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை யாகும். இந்த நிலையில் வருகின்ற 11-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரம் தொடங்கியது.

    ஆடுகள் அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று சந்தை கூடியது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர். சந்தை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், "நாங்கள் எப்போதுமே சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்க வருவோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது. பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.

    ரூ.49,000 கொண்டு வந்தால் இரண்டு முதல் மூன்று ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் விக்கிற விலைவாசிக்கு இதனால் விவசாயிகளும் வியாபாரிகளுக்கும் கஷ்டமாக உள்ளது. யாரு யாரு எவ்வளவோ பணம் கொண்டு செல்கிறார்கள் அதையெல்லாம் தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரியவில்லை.

    வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை தான் பிடிக்கிறார்கள். குறிப்பிட்டு இந்த ஆட்டு வண்டியில் கொண்டு செல்லும் வியாபாரிகள் பணத்தை தான் வந்து வியாபாரிகள் பணத்தை தான் வந்து பிடிக்கிறார்கள். இதனால் பயந்து கொண்டு பணம் கொண்டு வருவதில்லை. இதனால் விவசாயிகளி டம் சந்தையில் வந்து ஆடுகள் வாங்க முடியவில்லை. ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை. கடன் சொன்னாலும் விவசாயிகள் தருவார்களா. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சற்று அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

    விலை சற்று அதிகமாக உயர்ந்து ஆடுகளை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுமார் ரூ 40 லட்சத்திற்கும் மட்டுமே விற்பனை ஆகியது என்று வியாபாரிகள் வருத்துடன் தெரிவித்தனர்.

    • மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி இன்று (4-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது.

    மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    அதன்படி தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்த திருச்சி சாலையில் வசித்து வரும் 86 வயதான முன்னாள் ஆசிரியை ஜெகதாம்பாள் தனது வாக்கினை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பதிவு செய்தார்.

    வீட்டில் இருந்தபடியே வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

    85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

    • திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
    • திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

    பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
    • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

    நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

    ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

    எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×