search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதியவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    முதியவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

    • மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி இன்று (4-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது.

    மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    அதன்படி தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்த திருச்சி சாலையில் வசித்து வரும் 86 வயதான முன்னாள் ஆசிரியை ஜெகதாம்பாள் தனது வாக்கினை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பதிவு செய்தார்.

    வீட்டில் இருந்தபடியே வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

    85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

    Next Story
    ×