search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை விரைவில் அமைக்கப்படும்: பாரிவேந்தர் உறுதி
    X

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை விரைவில் அமைக்கப்படும்: பாரிவேந்தர் உறுதி

    • ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன்.
    • நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன்

    திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி காக்காயம்பட்டி நால்ரோடு பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயை எனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பள்ளிக்கூடங்களில், ஏனைய தேவை உள்ள அத்தனை இடங்களிலும் மனுக்களாக பெறப்பட்டு அவர்களின் தேவைகளை முழுவதுமாக செய்து கொடுத்துள்ளேன்.

    அரசு பள்ளிக்கூடங்களுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம்.ஆகவே அந்த 17 கோடியை முழுவதுமாக செவழித்து விட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.

    ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். மீண்டும் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்வேன்.

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்து வைப்பேன்.

    வேட்டை நாயக்கர்கள் என்கிறவர்கள் அவர்களது ஜக்கம்மா தெய்வத்திற்கு முயல் ரத்தம் வைத்து வழிபடுகிறார்கள். காட்டுக்குள் வேட்டைக்கு செல்ல கூடாது என அந்த சமூகத்தினருக்கு ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த 50 பேரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு வாரம் அங்கி வைத்திருந்து பாராளுமன்றத்தை காட்டி, தாஜ் மஹாலை காட்டி. அதற்கான மந்திரியிடம் பேச வைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து பிரச்சனையை சொன்னோம்.

    இதன் பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பதில் வந்தது. அதில் வேட்டை நாய்கள் தடுக்கப்பட்ட விலங்கினங்கள் அல்ல. அவற்றை பயன்படுத்தலாம் என்று பதில் வந்தது. எனவே நீங்கள் தைரியமாக வேட்டை நாய்களை பயன்படுத்தலாம். அதையும் மீறி வனத்துறையினர் தடுத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் பேசினார்.

    Next Story
    ×