என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது.
- முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்.
தமிழக அமைச்சர் கே.என். நேரு இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சியர் இதை சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்?.
நாங்கள் வளர்ந்திருக்கிறோம். முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். அதை வைத்து துணிந்து மக்களிடம் செல்வோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மணப்பாறை சிப்காட்டில் புதிய நிறுவனம் வரப்போகிறது. அந்த நிறுவனம் அமைந்த பிறகு, திருச்சி முகமே மாறும் என தொழில் அதிபர் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள்.
2026-ல் நாங்கள்தான் நிற்கிறோம், நாங்கள்தான் ஜெயிப்போம். தளபதி மீண்டும் முதல்வர் ஆவார். டெல்டாவில் மிகவும் அதிகமாக தொகுதிகளை வென்று கொடுப்போம்.
இவ்வாறு கே.என். நேரு தெரிவித்தார்.
- தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.
திருச்சி:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மாலை 5 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.
பின்னர் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி இரவு 8:30 வரை நீடித்தது. இதனால் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், பாரதியார் சாலை, மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.
இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது. ஒரே நாளில் நேற்று மாவட்டம் முழுவதும் 316.2 மில்லி மீட்டர் மழை பதிவானது அதிகபட்சமாக பொன்னணி ஆறு அணைக்கட்டுப் பகுதியில் 44.4 மீட்டர்
மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 22.4 ,தேவி மங்கலம் 5.4, சமயபுரம் 9 ,சிறுகுடி 3.6 ,வாத்தலை அணைக்கட்டு 6.6 , மணப்பாறை 5, கோவில்பட்டி 38.2 ,மருங்காபுரி 28.2, முசிறி 3 , புலிவலம் 2 ,நவலூர் கொட்டப்பட்டு 26.5 ,துவாக்குடி 1.5, கொப்பம்பட்டி 12 ,பொன்மலை 12.8, திருச்சி ஏர்போர்ட் 21.2 ,திருச்சி ஜங்ஷன் 36.4 ,திருச்சி டவுன் 38 என மழை பதிவானது. இந்த மழையினால் நேற்று இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு.
தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அங்கு, சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.
பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் நிலையில் உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.
- என் தந்தை எனக்கு அளித்த மிகப்பெரிய சொத்து இந்த மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்பு தான்.
- நேசிப்பால், அன்பால், உருவான ஒரு உறவு தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உன்னதமான இயக்கம்.
திருச்சி சிறுகனூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா ம.தி.மு.க. மாநாட்டில், கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. பேசியதாவது:-
தலைவர் மீது நீங்கள் கொண்டுள்ள காதல், இந்த இயக்கத்தின்மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசம், உலகில் வேறு எங்கும் இந்த பந்த பாசத்தை பார்க்க முடியாது.
என் தந்தை எனக்கு அளித்த மிகப்பெரிய சொத்து இந்த மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்பு தான். ஆயிரம் ஆயிரம் கோடிகள் கொடுத்தால் பெற முடியாதது. விலை மதிப்பற்றது. எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தலைவர் மீது கொண்ட காதலால், நேசிப்பால், அன்பால், உருவான ஒரு உறவு தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உன்னதமான இயக்கம்.
அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை அழித்து விடலாம், பிளவுபடுத்தலாம் என்று கடந்த 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தனர். இப்போதும் முடியவில்லை, எப்போதும் முடியாது.
இமயமலையை கூட நகர்த்தி விடலாம். ஆனால் லட்சக்கணக்கான மறுமலர்ச்சி சொந்தங்களின் இதயத்தில் குடியிருக்கும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.
இதை சொல்லும்போது, மகாகவி பாரதியின் கவிதைதான் என் நினைவுக்கு வருகிறது.
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
பல வேடிக்கை மனிதரைபோல் நான் வீழ்வேன் என்று நீ நினைத்தாயோ? வீழ்ந்தது நீதான். நான் வீழவில்லை. நீங்களும் வீழவில்லை.
பேரறிஞர் அண்ணா கனவு கண்ட தமிழகம் ஒரு வலிமையான தமிழகம், ஒரு வளமாக தமிழகம் அடையும் வரை நாம் வீழப்போவதில்லை. மறுமலர்ச்சி தி.மு.க வீழப்போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது.
- தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13-ந்தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது.
திருச்சியை குலுங்கும் அளவுக்கு மக்கள் கடலில் விஜய் நீந்தி சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரின் பிரசார வாகனம் மரக்கடை பகுதிக்குச் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உத்தேசித்து, திட்டமிட்டே மரக்கடையில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
காரணம், ஏற்கனவே எடுத்த பல சர்வே முடிவுகள் திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிதும் சாதகமாக இருப்பதை தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் தாமே களம் இறங்கினால் எளிதில் வெற்றி வாகை சூடலாம் என கருதுகிறார்.
இந்த சட்டமன்ற தொகுதியில் 20 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகளும், 18 சதவீத கிறிஸ்தவர் வாக்குகளும், 18 சதவீத பிள்ளைமார் வாக்குகளும், 10 சதவீத தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும், 8சதவீத நாயுடு வாக்குகளும், 6சதவீத செட்டியார் வாக்குகளும், 6 சதவீத கோனார் வாக்குகளும், 5 சதவீத முக்குலத்தோர் வாக்குகளும் மற்றும் ஆசாரி, உடையார் ,வன்னியர், பிராமின், முத்தரையர் , ரெட்டியார், சௌராஷ்டிரா, நாடார், முதலியார், தேவேந்திரர் உள்ளிட்ட இதர வாக்கு வங்கிகள் 27 சதவீதம் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களில் விஜய்க்கு முதல் தர மாநகரங்களான சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோன்று வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கும் பட்சத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை உயரச் செய்யும் என விஜய் நம்புகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது. தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள நட்சத்திர வேட்பாளரை களமிறக்கவும் தி.மு.க. தயாராகி வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் தகவல் பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
- 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.
புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் நேற்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு உழைப்பது, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பாஜக சதியை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
மாநாட்டில் பேசிய வைகோ, எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை போராடி விரட்டியடித்த இயக்கம் மதிமுக. டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசு இடையில் நிற்பதுதான் காரணம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்" என்று பேசினார்.
- பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்
- இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.
திருச்சி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரத யாத்திரை புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு அவர் நேற்று 2 நாள் சுற்று பயணமாக வந்தார். திருச்சியில் பூத் முகவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் மாலையில் முசிறி தா.பேட்டையில் கேப்டன் ரத யாத்திரையில் கலந்து கொண்டார்.
இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் 21-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலை முள்ளிப்பாடியில் அமைக்கப்பட்டிருந்த 73 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். இதில் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் எங்களின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கேள்விக்கு பதில் அறிவிப்போம். பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், அதே போல் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா?.
அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்ல. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.
புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போது தான் அது மக்களால் அங்கீரிக்கப்படும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பிரபலமானவர்கள். அதனால் தான் நெருக்கடிகள் அதிகம். ஆனால் நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள், இதுவெல்லாம் எங்களுக்கு பெரிதல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
- மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
- நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி மேலாளர் கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் சென்றார்.
பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் நேற்று இரவு 3 ஊழியர்களுடன் சென்னை திரும்பினர்.
திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி:
திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்து எந்த வளர்ச்சியும் இல்லை என த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பட்டியலிட்டு கூறியதாவது:-
* கேக்கலையா கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா?
* திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
* கல்லூரி, டைடல் பார்க், அங்காடி, பேருந்து முனையம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
* திருச்சியில் நூலகம், அறிவுசார் மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
- இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை.
- காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். 8 கி.மீ. தூரத்தை 4 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தார். திருச்சி மரக்கடையில் பேசிய விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார். பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார்.
திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அன்பின் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன்.
கூட்டம் வந்திருப்பதாக சொன்னார்கள். முழுமையாக பார்த்திவிட்டு, அதன்பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்" என்றார்.
- எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
- நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.
அப்போது, விஜய் ஆளும் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.
எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும்; பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise.
நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் தி.மு.க. அரசு நன்றாக காசு பார்க்கின்றது
அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என தி.மு.க சொன்னது செய்ததா? இப்படியே நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். தி.மு.க-வினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை
டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? மின்கட்டண கணக்கீடு மாதம் தோறும் எடுப்பதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?
இவ்வாறு அவர் கூறினார்.






