என் மலர்
தஞ்சாவூர்
- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு நடந்தது.
- தமிழக அரசின் மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தஞ்சாவூர்:
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் , முதலீட்டார்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கீடு தஞ்சை மாவட்ட த்திற்கு 667 நபர்களுக்கு ரூ.1000 கோடி நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்கு விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட மாபெரும் கடன் வழங்கு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் மாவட்ட தொழில் மையத் திட்டங்களை விளக்கியதோடு தமிழக அரசு மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதலீட்டு மானியமாக தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்க வும் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் 23 பேரிடம் இருந்து ரூ.697 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடன் வழங்கு முகாம் மூலமாக 512 பேருக்கு ரூ.121.93 கோடி கடன் வங்கியில் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் ஜோசப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் நாயர், இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் வங்கி திட்டங்களை விளக்கினர்.
இதில் மகளிர் திட்ட உதவி இயக்குனர், தாட்கோ மேலாளர், தொழில் முனைவோர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும்
தஞ்சாவூர்:
உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியரில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த மத்திய பா.ஜ.க இணை அமைச்சர் அஜய் மிஸ்ராடெனியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று
அனைத்து தொழிற்சங்க ங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் ரவி, ஏ .ஐ .சி. சி .டி .யூ மாவட்ட செயலாளர் ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் 9 பேரை காரை ஏற்றி கொலை செய்த மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கருப்பு கொடிகளை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.
இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறி யாளர் பழனி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாவட்ட தலைவர்கள் ராமச்சந்திரன் , செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாஸ்கர், நிர்வாகி சுரேஷ், ஜனநாயக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருணாச்சலம் , மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ராமசாமி, தொமுச விவசாய அணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், சைவராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், தொமுச மாவட்ட தலைவர் செல்வராஜ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் செல்வராஜ் ,அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், பாரி, நீல நாராயணன், விஜயகுமார், ராஜேந்திரன், கோவிந்தராஜன், துரை.மதிவாணன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ) தஞ்சை மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- வருகிற சட்டசபை தேர்தலில் தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மா.சேகர் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.
பின்னர் புதிய நிர்வாகிகள் அனைவரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரெயிலடிக்கு வந்தனர். தொடர்ந்து ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பேசினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் காமராஜர் பேசியதாவது:-
தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது தான் மத்திய மாவட்டமாகும். புதிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உங்களது செயல்பாடுகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பார்.
வருகிற சட்டசபை தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தருவோம். தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்டது அ.தி.மு.க.
இது சாதாரண மக்களுக்கான இயக்கம். 51 ஆண்டுகளை கடந்தும் நிமிர்ந்து நிற்கிறது.
மக்களால் ஏற்று கொண்ட இயக்கம். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. என்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அமருவார். இன்றைக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு காவிரி நீரை பெற்று தரவிலை. காவிரியில் நமக்கான உரிமையை பெற்று தராத அரசாக உள்ளது. இதை கண்டித்து வருகிற 6-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வார்.
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கபிஸ்தலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சேரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, மஞ்சுளா கோபால், ராணி கலியபெருமாள், ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, மதுபாலா மூர்த்தி, ரவி, சித்ரா அன்பரசன், மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தி.மு.க ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும்,வரவு செலவு கணக்கு குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கோபால், தி.மு.க நிர்வாகிகள் சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன், கலியபெருமாள், மூர்த்தி, முத்துராமன், ராஜ் ,வசந்த், பிரகாஷ் ,அமீர், ராஜ்குமார், சாமிநாதன், உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வேஷ்டி, புடவைகள் மற்றும் மதிய விருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சார்பில் வழங்கப்பட்டது.
- ஊராட்சி சாலை மேம்படுத்துதப்படும்.
- கூட்டத்தில் ஊராட்சி தீர்மான அறிக்கைகளை வாசித்து சபையின் ஒப்புதலை பெற்றார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஒன்றியம் சூரியகோட்டை ஊராட்சி சமுதாய சேவை மைய கட்டிடத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி பழனிவேல் தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
துணைத்தலைவர் ஆனந்தி பக்கிரி சாமியின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி செயலர் திரிபுரசுந்தரி தீர்மான அறிக்கைகளை வாசித்து சபையின் ஒப்புதலை பெற்றார்.
இதில் அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூலம் முறையாக குடிநீர் வழங்குவது.சூழிய கோட்டை ஊராட்சியில் அங்கன்வாடி, அங்காடி, நியாய விலை கடை சூரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி சாலை மேம்படுத்துதல், சூழியக்கோட்டை ஊராட்சி இடுகாட்டிற்கு சுற்றுச்சுவருடன் கூடிய வசதிகளுடன் கூடிய இடுகாடு அமைத்து தருதல்.
உள்ளிட்ட வளர்ச்சியிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு சபையின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சுகாதார செவிலியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலர் திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.
- குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
- விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பழைய பஸ் நிலையம் வழியாக வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள்,
பொதுமக்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் தேசப்பிதா காந்தியடிகள் போல வேடமணிந்த அரசுப்பள்ளி மாணவன் சிவநாசிக்வரன் தலைமை யில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர் .
வாகனம் இயக்கும் போது வாகனத்துக்கும் ஓட்டுனருக்கும் முறை யான ஆவணங்கள் கைவசம் இருக்குமாறு பார்த்து க்கொள்வேன்.
இருசக்கர வாகனம் இயக்கு ம்போது ஹெல்மெட்டும் நான்கு சக்கர வாகனம் இயக்கும்போது சீட்பெ ல்ட்டும் அணிய வேண்டும்.
பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். போதையில் வாகனம் இயக்க மாட்டேன்.
சாலை விதிகளை பின்பற்றுவேன் என்று வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா , நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறை குறிக்கும் புத்தகத்தையும் காந்திக்கு பிடித்த உணவான நிலக்கட லையும் காந்தி ஜெயந்தி பரிசாக வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.
- காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சை தலைமைதபால் நிலையம் எதிரில் உள்ள ராணுவத்தினர் மாளிகை காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்து
கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் உதவி இயக்குநர், பிரான்சிளப் தெரசாமேரி, கதர் அங்காடி மேலாளர் சாவித்திரி மற்றும் அரசு அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு எங்கள் கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கை யாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.
மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.
கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றிருக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், உல்லனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் பாலோபந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 64). சம்பவத்தன்று இவர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக சாம்பசிவம் தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
- இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.
கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.
சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.
விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.
தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சின்ன சீரங்கம் எனப்படும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமையொட்டி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் முக்கூட்டுச்சாலை, பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய கடைத்தெரு வழியாக மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்தனர். விழிப்புணர்வு பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தொடங்கி வைக்க, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன், முதுகலை ஆசிரியர்கள் இளவரசன், கவியரசன், உதவி திட்ட அலுவலர் ஓவியரசன் பள்ளியின் ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிரமேல்குடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.






