search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிச்சப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    குளிச்சப்பட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    குளிச்சப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
    • விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×