search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் 512 பேருக்கு ரூ.121.93 கோடி தொழில் கடன் வழங்கல்
    X

    தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடன் நிறைவு வழங்கும் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

    தஞ்சையில் 512 பேருக்கு ரூ.121.93 கோடி தொழில் கடன் வழங்கல்

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு நடந்தது.
    • தமிழக அரசின் மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் , முதலீட்டார்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கீடு தஞ்சை மாவட்ட த்திற்கு 667 நபர்களுக்கு ரூ.1000 கோடி நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்கு விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட மாபெரும் கடன் வழங்கு விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் மாவட்ட தொழில் மையத் திட்டங்களை விளக்கியதோடு தமிழக அரசு மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதலீட்டு மானியமாக தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்க வும் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் 23 பேரிடம் இருந்து ரூ.697 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கடன் வழங்கு முகாம் மூலமாக 512 பேருக்கு ரூ.121.93 கோடி கடன் வங்கியில் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் ஜோசப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் நாயர், இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் வங்கி திட்டங்களை விளக்கினர்.

    இதில் மகளிர் திட்ட உதவி இயக்குனர், தாட்கோ மேலாளர், தொழில் முனைவோர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×