என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூரியகோட்டையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
அம்மாபேட்டை சூரியகோட்டையில் சிறப்பு கிராமசபை கூட்டம்
- ஊராட்சி சாலை மேம்படுத்துதப்படும்.
- கூட்டத்தில் ஊராட்சி தீர்மான அறிக்கைகளை வாசித்து சபையின் ஒப்புதலை பெற்றார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஒன்றியம் சூரியகோட்டை ஊராட்சி சமுதாய சேவை மைய கட்டிடத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி பழனிவேல் தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
துணைத்தலைவர் ஆனந்தி பக்கிரி சாமியின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி செயலர் திரிபுரசுந்தரி தீர்மான அறிக்கைகளை வாசித்து சபையின் ஒப்புதலை பெற்றார்.
இதில் அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூலம் முறையாக குடிநீர் வழங்குவது.சூழிய கோட்டை ஊராட்சியில் அங்கன்வாடி, அங்காடி, நியாய விலை கடை சூரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி சாலை மேம்படுத்துதல், சூழியக்கோட்டை ஊராட்சி இடுகாட்டிற்கு சுற்றுச்சுவருடன் கூடிய வசதிகளுடன் கூடிய இடுகாடு அமைத்து தருதல்.
உள்ளிட்ட வளர்ச்சியிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு சபையின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சுகாதார செவிலியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலர் திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.






