என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர்.
    • கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தொ.மு.ச.பேரவையின் உட்பிரிவுகளின் ஒன்றான , தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர், ஓட்டுநர் விஜய் என்ற இளைஞர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவிடம் அரசின் உதவித்தொகை ரூ.2 லட்சத்தை தொ.மு.ச. பேர வையின் அகில இந்திய பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் வழங்கினார்.தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி வழங்கும் வகையில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பணி ஆணையையும் வழங்கினார்.

    இது குறித்து தொ.மு.ச. பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. அளித்த பேட்டியில்:-

    கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நல வாரியத்தை தொடக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி என்றார்.

    இந்நிகழ்வில் கரந்தை பகுதி தி.மு.க செயலாளர் கார்த்திகேயன், தொ.மு.ச.மா வட்ட கவுன்சில் செயலாளர் சேவியர், உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சாக்ரட்டீஸ், லாரன்ஸ், காதர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    • தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கழிவுநீர், செப்டிங் டேங்க் தூய்மை படுத்துபவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதனை சிலர் முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் உபகரணங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடையை ரோபோ மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஜே.சி.பி. எந்திரங்கள், ஆட்டோ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 7598016621 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
    • மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியில் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    தொடர் மழையிலும் பணி செய்த தூய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் அந்த வார்டு குடியிருப்போர் நல சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 20 பேரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலர் நீலகண்டன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவம், குடியிருப்போர் சங்கத்தினர், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நேர்காணல் முகாம் 22 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-

    பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு வார விழா நடந்தது.
    • விழாவில் உறுதிமொழி எடுத்தல் மரம் நடுதல் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    70- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடுதல் விழா தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர், வார விழா குழு தலைவர்பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் வார விழா குழு துணை தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல்மஜீத், பொது விநியோகத் திட்ட துணைப்ப திவாளர் கருப்பையா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள்சந்தான லட்சுமி, அன்புச்செ ல்வன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சிய ர்பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த ஒருவர் திடரென கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார்.
    • 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

    தஞ்சாவூர்:

    காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

    இவரது மனைவி கண்ணம்மை (வயது 51).

    இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.

    இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர்.

    இவரது மகன் அரவிந்த் (20) தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தார்.

    நேற்று அரவிந்தை அவர் படிக்கும் கல்லூரியில் கொண்டு விடுவதற்காக காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சைக்கு குடும்பத்துடன் வந்தார்.

    அப்போது மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அறிந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி 3 பேரும் சாப்பிட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகில் வந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர் ஒருவர் திடரென கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    இதில் 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

    இதில் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை மற்றும் குடும்பத்தினர் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டனர்.

    ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அவர் தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார்.
    • தஞ்சையில் 5 நாடகள் நடைப்பயணம் நடத்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொகுதியில் என்மண், என்மக்கள் 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தஞ்சை சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் என்ற நடைபயணத்தின் 4-கட்ட பயணத்தை இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் அவர் 5 நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    திருவையாறில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைப்பயணத்தை தொடங்கும் அவர் மாலை 4 மணிக்கு தஞ்சை கொடிமரத்துமூலை, வடக்குவீதி, தெற்குவீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப்மூலையில் பேசுகிறார்.

    அன்று இரவு தஞ்சையில் தங்கும் அவர் மறுநாள் 26-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னார்குடியில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    27-ந் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    பின்னர் டிசம்பர் 1-ந் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளிலும் நடைப்ப யணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 நாடகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் பாரதிமோகன், ரெங்கராஜன், ராஜேஸ்வரன், உமாபதி, முரளிதரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர்.
    • தஞ்சை அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தரஅசைவ உணவகத்துக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று கோலாகலாமாக கொண்டப்பட்டது.

    தஞ்சாவூரில் போடப்பட்டி ருந்த தற்காலிக கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும் ஆங்காங்கே தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர் .

    இந்நிலையில் போர்கால நடவடிக்கையாக விரைந்து குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

    இதன்படி சுமார் 100 தூய்மை பணியாளர்கள் அவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட தனி வாகனத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவர்களுக்கு தலைவாழையிலையில் மட்டன், முட்டையுடன் ஆவிபறக்க பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது .

    தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறி மரியாதை செய்ததாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர் .

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு உயர்தர அசைவ உணவகத்தில் அதுவும் குளிரூட்டப்பட்ட அறையில் சுடச்சுட ஆவி பறக்க அசைவ விருந்து பரிமாறப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது.

    தங்களது பிள்ளைகளை கூட இது போன்ற ஹோட்ட லுக்கு அழைத்து வரவில்லை.

    இந்த ஓட்டலை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

    ஆனால் குப்பை வாரும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவு அளித்து நல்ல மரியாதை அளித்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்துக்கு நன்றி என்றனர்.

    முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பஸ்களிலே வந்து செல்கின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இல்லாததால் பஸ் படிக்கட்டில் தொங்கியப்ப டியும், பின்னால் ஏறி நின்றும் ஆபத்தான வகையில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று காலை ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த தனியார் பஸ்சில் புத்தக பைகளை தொங்கவிட்டப்படி படிக்கட்டில் தொங்கி கொண்டும், பின்னால் ஏணியில் ஏறி நின்றும் பல மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணம் செய்து வந்தனர். எதிர்பாராத வகையில் தவறி விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனைப்பட்டனர்.

    இது குறித்து மாணவர்கள் கூறும்பாது, தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் வேறு வழியின்றி பஸ்சில் தொங்கியப்படி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் சில மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு பஸ்சை விட்டால் அடுத்த பஸ் வருவதற்குள் பள்ளி, கல்லூரிகள் வகுப்பு தொடங்கி விடும். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி ஏறி வருகிறோம்.

    படிக்கட்டில் தொங்கும் போதும், பின்னால் ஏணியில் ஏறி நிற்கும் போதும் தவறி விழுந்து விடுவோமோ என ஒருவித அச்சத்தில் தான் பயணிக்கிறோம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பாக ஒரத்தநாடு, பூதலூர், பாபநாசம், திருவையாறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கும், இங்கிருந்து அந்தந்த பகுதிகளுக்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நாகை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய கனமழை இன்று காலையும் நீடித்து பெய்து வருகிறது.
    • சம்பா, தாளடி இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நாகை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்கள் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய கனமழை இன்று காலையும் நீடித்து பெய்து வருகிறது. இந்த தொடர்மழை காரணமாக நாகை ஒன்றியத்தில் பாலையூர், வடகுடி, கீழ்வேளூர் ஒன்றியத்தில் ஒதியத்தூர், ஓர்குடி, தலைஞாயிறு ஒன்றியத்தில் வெண்மணச்சேரி, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா இளம் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. கனமழை ஓய்ந்தால் மட்டுமே மழைநீரை வடிய வைக்க முடியும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் சம்பா, 60 ஆயிரம் தாளடி ஏக்கர் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. மேலும் இந்த கனமழை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பா, தாளடி இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நாகை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தெத்தி சிவசக்தி குடியிருப்பு பகுதி மற்றும் கலெக்டர் அலுவலகம், மழை நீரால் சூழ்ந்து தனி தீவாக காட்சியளிக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வார உத்தரவிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தேனூர் கதவணையில் இருந்து பிரியும் முடவன் வாய்க்கால் உட்பிரிவுகளான மருவத்தூர் வாய்க்கால், கோமனாண்டி வாய்க்கால் தண்ணீர் மூலம் புங்கனூர், மல்லுக்குடி, மருவத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி உள்ளிட்ட 5000 ஏக்கரில் மின் மோட்டார் மூலம் நடவு பணியும், நேரடி நெல் விதைப்பின் மூலம் சாகுபடி செய்துள்ளனர்.

    இதேபோல் கொள்ளிடம் பகுதியில் ஆச்சாள்புரம், நல்லூர், ஆர்ப்பாக்கம், புளியந்துறை, பச்ச பெருமாள்நல்லூர், பழைய பாளையம், வேட்டங்குடி, வழுதலைக்குடி, தண்ணீர் பந்தல், ஆயங்குடி பள்ளம், குன்னம், பெரம்பூர், மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு செய்தனர். தற்போது பெய்த தொடர் மழையால் இந்த ஒரு மாத வயதுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரில் மழை நீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோமளவல்லி. இவரது வீடு கனமழையால் மண்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமானது. இதில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவரது வீடும் மழையால் இடிந்து சேதம் அடைந்தது.

    இதுகுறித்து அறிந்த நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி பாலமுருகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கோமளவள்ளி வீட்டினை பார்வையிட்டு சேதம் அடைந்திருப்பதால் முற்றிலுமாக இடித்து விடும்படி அறிவுறுத்தினார். கீழத்தென்பாதி அங்கன்வாடி கட்டடம் அருகே இருந்த வேப்பமரம் மழையால் முறிந்து விழுந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வெட்டி அகற்றினர்.

    ×