என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    • வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மணல்மேடு மகாராஜபு ரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 27).

    இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவர் கடந்த 11-ந்தேதி தீபாவளி பண்டி கைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர், அவர் கடந்த 13-ந்தேதி வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் வீடு திரும்பவில்லை.

    இதைதொடர்ந்து, அசோக் ராஜின் பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜை தேடி வந்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் அசோக்ராஜ் கடைசியாக சோழபுரம் மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவர் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், கடந்த 13-ந் தேதி இரவு அசோக்ராஜ் தன்னை வீட்டில் வந்து பார்த்ததாகவும், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதால் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அழுததாகவும் தெரிவித்தார்.

    இதனால் தஞ்சையில் உள்ள தனக்கு தெரிந்த டாக்டரை அணுகுமாறு அவரிடம்கூறி அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கூறினார்.

    கடந்த 16-ந் தேதி அசோக்ராஜ் வீட்டிற்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது.

    அந்த கடிதத்தில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

    ஆனால் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையழுத்து இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நான், அசோக் ராஜிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் தலையை துண்டித்தேன். பின்னர் உடல் மற்றும் தலையை எரித்து தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என்றார்.

    இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் நேற்று கேசவமூர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவர் அசோக்ராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

    இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பெண் சிவில் நீதிபதி ஒருவர் சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் பாரபங்கியில் பதவியில் இருந்தபோது மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய 2 பக்க கடிதத்தில் "இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், "என்று குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை நிலுவையில் இருந்தபோது மாவட்ட நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தான் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

    ×