search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gruesome murder"

    • கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக இருந்தார். நவம்பர் 11ம் தேதி தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த அவர், நவம்பர் 13ம் தேதி சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் சென்னை சென்று சேரவில்லை.

    இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கடைசியாக சோழபுரம் கிழக்குத் தெருவில் உள்ள சித்த மருத்துவர் கேசவமூர்த்தியின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. பின்னர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட கேசவ மூர்த்தி, அசோக் ராஜனுக்கு போதை மருந்துகள் கொடுத்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து அவரது வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பின்னர் அசோக் ராஜன் உடலை போலீசார் நேற்று முன் தினம் தோண்டி எடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    சித்த வைத்தியரான கேசவ மூர்த்தி ஆண்மை குறைபாடு போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளால் தயாரித்து அவர்களுக்கு கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தார்.

    பின்னர் தான் அசோக் ராஜனுக்கு வலை விரித்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு சில மருந்துகளை கொடுத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் உடல் வலி தாங்க முடியாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு அசோக் ராஜன் மயங்கினார்.

    இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என கருதிய கேசவ மூர்த்தி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை ஆடு வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்து தனியாக புதைத்துள்ளார். விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி உள்ளார்.

    பின்னர் அந்த உடலை வீட்டின் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்துவிட்டார்.

    இதற்கிடையே சித்த வைத்தியர் கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடலில் சில உள் உறுப்புகளை காணவில்லை.

    ஆகவே உள் உறுப்புகளை வெட்டி எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆகவே திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கேசவ மூர்த்தியின் டைரியில் 194 பெயர்கள் கொண்ட பட்டியல் இருந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்கள், அவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள்.

    எனவே டைரியில் இடம்பெற்று இருப்பவர்கள் கேசவமூர்த்தி இடம் சிகிச்சை பெற்றவர்களா? எதற்காக சிகிச்சை பெற்றார்கள் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    எனவே போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார்
    • டிரான் மீது சுமார் 107 முறை கத்திக்குத்து விழுந்தது

    வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான்.

    இவர் தனது தாயுடனும், தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை வியட்னாமில் வாழ்ந்து, சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார்.

    இவரது தாய்க்கும், மாற்றாந்தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம்.

    இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார். இதனால் பொருளிழப்பு ஏற்படும் என அஞ்சிய அவரது இரண்டாவது கணவர் சமீபத்தில், ஒரு நாள் இரவு டிரானின் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றியதில் கியெப், டிரானின் தாயின் முகத்திலும் தலையிலும் சுமார் 15 முறை கைகளாலேயே குத்தினார். அப்போது தனது படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்த டிரான், சத்தம் கேட்டு எழுந்து வந்து, உடனடியாக தாயாரை காக்க முயன்றார்.

    தாயார் தாக்கப்படுவதை தடுக்க கியெப்பின் கைகளை டிரான் பிடித்து கொள்ள, உடனே டிரானின் தாயார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதையடுத்து கியெப்பின் கோபம் டிரான் மீது திரும்பியது. இதனால் கியெப் ஒரு பெரிய கத்தியை எடுத்து டிரான் நெஞ்சில் சரமாரியாக பல முறை குத்தினார்.

    தனது உடை முழுவதும் ரத்த கறை இருந்ததால், இதற்கு பிறகு கியெப் உடைகளை மாற்றி கொண்டார். பிறகு ஒரு கத்தியால் டிரானை மீண்டும் தாக்கினார். டிரான் மீது 107 கத்திக்குத்துகள் விழுந்தன. கத்தி குத்துக்கு ஆளான டிரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதற்கிடையே டிரானின் தாய், தான் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அமெரிக்காவின் அவசர உதவி எண்ணை அழைத்தார். காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். கத்தியுடன் நின்றிருந்த கியெப் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சி கத்தியை கீழே போட்டதும் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் கிங் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

    டிரானின் தாயாரையும் கொல்ல வீடு முழுவதும் அவரை தேடி வந்த கியெப்பின் நோக்கம், காவல்துறையினரின் வருகையால் தடைபட்டு, டிரான் தாயாரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    நன்றாக படிக்க கூடியவரான ஏஞ்சலினா டிரான் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் கூறும் அவரை அறிந்தவர்கள், அவருக்கு நேர்ந்த கோர முடிவு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • மதுரை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காலாங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு பாகங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிச்சென்றி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கண்டறியப்பட்டால் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? என்பது தெரியவரும். ஆகவே பிணமாக கிடந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×