என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வினீத் தனது நண்பர்களுடன் காரைக்குடி காவல் நிலையத்திற்கு கையெழுத்திடுவதற்காக வந்துள்ளார்.
    • கடந்த மார்ச் மாதம் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    காரைக்குடி:

    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது27). இவர் காரைக்குடியில் நடந்த ஒரு கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

    நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்த அவர் காரைக்குடியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக புது பஸ் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    வழக்கம்போல் இன்று காலை தெற்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். அங்கு கையெழுத்திட்டு விட்டு சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் அருகே ஒரு கார் வேகமாக வந்து நின்றது.

    அதில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு வேகமாக காரில் ஏறி தப்பிச் சென்றது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வினீத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்தவர்களுக்கும், வினீத்திற்கும் தொடர்பு உள்ளதா? முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த நூல் வெளியீட்டு விழா-பொதுக்கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாசலில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் அறிவித்த ஜம்புத்தீவு பிரகடனத்தை இந்திய சுதந்திரப் போராட்ட மாக மத்திய, மாநில அரசுகள் அறிவுப்புச்செய்ய வலியுறுத்தி சிவகங்கையின் அனைத்துசமூக மக்கள், அனைத்து சமூக அமைப்பு களின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் திருச்சியில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்தனர். இதனை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று முதல் சுதந்திர போராட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர் மேலும் ஜம்பு தீவு பிரகடனம் சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழா வும் நடைபெற்றது

    இவ்விழாவில் இளைய மன்னர் மகேஷ் துரை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சி யப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குண சேகரன், நாகராஜன், மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள், இஸ்லாமிய தலை வர்கள், மூத்த கல்வியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரபட்டியை சேர்ந்தவர் நரியழகன் (வயது50). இவரது மனைவி செல்லம்மாள்(45).

    இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள இரு மகள்களில் ஒருவர் காரைக்குடியில் நர்சாக வேலை பார்க்கிறார். மற்றொருவர் பெற்றோருடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நரியழகனுக்கு மது குடிக்கம் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்லம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று நள்ளிரவும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த செல்லம்மாள், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த நரியழகன் சுருண்டு விழுந்து இறந்தார். கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த செல்லம்மாள், வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார்.

    நரியழகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலையிலேயே அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான அவரது மனைவி செல்லம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தில் சண்டையிட்ட கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகங்கையில் ரூ.10½ கோடி மதிப்பில் நடக்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் களஆய்வு நடத்தினர்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக களஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

    மேலும் வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வி, கூட்டுறவு, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பயன்கள், நிதிநிலை, செலவினங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சர்வாதிகாரி தான்.
    • பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பா.ஜ னதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் அண்ணா மலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழை உலக மொழி யாக்கியவர் பிரதமர் ேமாடி. பல்வேறு நாடுக ளுக்கும் சென்று தமிழை வளர்த்து வருகிறார். ஆனால் தி.மு.க. தமிைழ வைத்து வியாபாரம் செய்கிறது. புதிய பாராளு மன்றத்தில் நம்முடைய பாரம்பரிய செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கலாச்சா ரத்தை அறிய உதவும்.

    காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்போது ஊழல் குற்றச் சாட்டில் கனிமொழி உள்பட பலர் சிறைக்கு சென்றனர்.

    தி.மு.க. ஆட்சி ஒரு குடும்பத்திற்காக நடைபெறு கிறது. பிரதமர் மோடியை சர்வாதிகாரி என தி.மு.க. வினர் பேசி வருகின்றனர். ஆமாம். அவர் ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரி தான். உலக நாடுகளின் பட்டியலில் பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியா வளர்ச்சி அடைந்து வரு கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி, மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முக ராஜா, மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார், சுகனேஷ்வரி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகு முனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், ஒன்றிய பொது செயலாளர் பரம சிவம் மற்றும் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரியில் பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    • 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தென்னிந்திய அளவில் 3-ம் ஆண்டு பெண்க ளுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசை வென்ற அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணிக்கு ரூ.1 லட்சத்து 70 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசு ரூ.75 ஆயிரத்து 70 கர்நாடகா மாநிலம் மங்களூரு ஆழ்வாஸ் அணிக்கும், 3-வது பரிசு ரூ.50 ஆயிரத்து 70 சிங்கம்புணரி தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கும், 4-வது பரிசு ரூ.25 ஆயிரத்து 70 ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணிக்கும் வழங்கப்பட்டன.

    இதில் சிறந்த ரைடராக அந்தியூர் சக்தி பிரதர்ஸ் சவுந்தருக்கும், சிறந்த தடுப்பாற்றல் வீராங்கனையாக கர்நாடகா மங்களூரு ஆல்வாஸ் அணியைச் சேர்ந்த விருந்தாவிற்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைத்து அணிக ளுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. புரோ கபடி நடுவர் சிவனேசன் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள குறுமனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் கடந்த சில மாதங்க ளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி சாவு

    சிவகங்கை அருகே உள்ள அங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மானுவேல் மகன் சுரேஷ், விவசாயி. இவர் கோத்தகிரி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டி ருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது. மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில், சோமநாதர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர் பிராகாரத்தில் வலம் வந்தார்.

    சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுலீசுவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும், குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். மேலெநெட்டூரில் உள்ள சொர்ணவாரீசுவரர்-சாந்தநாயகி அம்மன் கோவில், இடைக்காட்டூர் ஆதிமணிகண்டேசுவரர் கோவில், வேம்பத்தூர் கைலாசநாதர்-ஆவுடையம்மன் கோவில்களிலும் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • சேவகபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வருடந்தோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா இந்த வருடம் ஆனி மாதத்தில் நடைபெற கிராமத்தார்க ளால் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரமோற்சவ விழாவின் துவக்க விழாவான நேற்று இரவு விநாயகர் சந்துவீரன் கூடம் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை சந்திவீரன் கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    மல்லிகை மலர்களால் அலங்கரிப்பட்ட சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஊர்வலம் சந்தி வீரன் கூடம் நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் வழி நெடுகிலும் பக்தர்கள் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர். வீடுகள் தோறும் அர்ச்சனை செய்வதற்கு நள்ளிரவில் பொதுமக்கள் விநாயகரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    வருகிற 25-ந்தேதி பிரமோற்சவ விழா காப்புகட்டுதலுடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி 9-ம் திருவிழா திருத்தேரோட்ட மும், 4-ந் தேதி லட்சம் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட பூப்பல்லுக்கும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.

    • தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.

    நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.

    இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×