search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கம்புணரி அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி
    X

    சிங்கம்புணரி அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி

    • செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரபட்டியை சேர்ந்தவர் நரியழகன் (வயது50). இவரது மனைவி செல்லம்மாள்(45).

    இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள இரு மகள்களில் ஒருவர் காரைக்குடியில் நர்சாக வேலை பார்க்கிறார். மற்றொருவர் பெற்றோருடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நரியழகனுக்கு மது குடிக்கம் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்லம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று நள்ளிரவும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த செல்லம்மாள், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த நரியழகன் சுருண்டு விழுந்து இறந்தார். கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த செல்லம்மாள், வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார்.

    நரியழகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலையிலேயே அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான அவரது மனைவி செல்லம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தில் சண்டையிட்ட கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×